சர்குஜா மாவட்டத்திலுள்ள ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக இந்த மஹாமயா மந்திர் அமைந்திருக்கிறது. இது சூரஜ்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்திலுள்ள தேவிபூர் எனும் இடத்தில் உள்ளது.
நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான ஒரு கோயிலாக இந்த மஹாமயா மந்திர் புகழ் பெற்றுள்ளது.
நவராத்திரி திருநாள் இப்பகுதியின் உள்ளூர் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மஹாமயா தேவியை முக்கியமான தெய்வமாக வழிபடும் இப்பகுதி மக்கள் இந்த திருவிழாவை அபரிமிதமான பக்தி மற்றும் ஈடுபாட்டுடன் நடத்துகின்றனர்.
அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தருகின்றனர். சூரஜ்பூர் பக்த மண்டலி எனும் அமைப்பு தேவிபூர் வரையில் பக்தர்களுக்கான இலவச பேருந்து சேவையையும் வழங்குகிறது.
அது மட்டுமல்லாமல் உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினரும் இந்த திருவிழா கோலாகலமாக நடப்பதற்கு உதவுகின்றனர்.
சூரஜ்பூரில் உள்ள ஷியாம் பாபா கோயில் எனும் மற்றொரு வழிபாட்டுத்தலத்தில் ஷியாமாவின் பிறந்த நாள் அன்று கோலாகலமான திருவிழா ஒன்று நடத்தப்படுகிறது. சர்குஜா மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.



Click it and Unblock the Notifications