தஞ்சை பெரிய கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் வடக்கே இந்த விஜயநகர கோட்டை அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டின் மத்தியில் நாயக்க மற்றும் மராட்டா மன்னர்களின் பங்களிப்பில் இக்கோட்டையின் வெவ்வேறு அங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால், தஞ்சாவூர் கலைக்கூடம், சிவகங்கைபூங்கா மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை இந்த கோட்டை வளாகத்தினுள் இடம் பெற்றுள்ளன.
அரண்மனையை பாதுகாக்கும் நோக்குடன் இந்த கோட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்து காணப்படும் இதன் ஒரு பகுதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
சோழர்கள் கால கோட்டைகள் எதுவுமே காலத்தின் ஊடே மிஞ்சி இராத நிலையில் பின்னாளில் உருவாகி மிச்சமிருக்கும் இந்த வரலாற்றுச்சின்னங்கள் அவசியம் காண வேண்டியவை என்பதில் ஐயமில்லை.