தீர்த்த தொட்டி, தேனியிலிருந்து 19 கிமீ தூரத்திலும், பெரிய குளத்திலிருந்து 2 கிமீ தூரத்திலும் உள்ள இடமாகும். தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் வழியில் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் இவ்விடம் அமைந்துள்ளது.
1000 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணிய கடவுளின் கோவில் இங்குள்ள மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். தீர்த்த தொட்டி என்றால் புனித நீருள்ள தொட்டி என்று பொருளாகும்.
இவ்விடத்தில் உள்ள இயற்கையான நீரூற்றை சுற்றிலும் வேம்பு மற்றும் பிற மூலிகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவில் உள்ள இந்த நீர் நிரம்பிய இடம் தீர்த்த தொட்டி என்று அழைக்கப்படுகிறது.
இந்த குளத்தில் ஒரு உள் மண்டபம் மற்றும் படிக்கட்டுகள் ஆகியவையும் உள்ளன. இந்த தீர்த்த தொட்டியின் சுற்றுச் சுவர்களில் சப்த கன்னிகைகள் என்றழைக்கப்படும் ஏழு கன்னியர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு, அவர்கள் முருக பெருமான் மற்றும் விநாயக கடவுளை நோக்கி வணங்கும் காட்சி உள்ளது.



Click it and Unblock the Notifications