சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் ஆய்வுகளை ஊக்குவிக்க நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இந்திய கடலோர வாழ் மக்களின் சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டது .
இந்நிறுவனம் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, பவழப்பாறைகள் மறுசீரமைப்பு மற்றும் செயற்கை பவழப்பாறைகள் உருவாக்கம் போன்ற செயல்களில் தன் பணியை செய்கிறது. இந்த நிறுவனத்தால் நடத்தப்படும் படிப்புகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை.