இயற்கை ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து தர காத்திருக்கும் பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயமானது தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலைக்கும், கேரளாவிலுள்ள நெல்லியம்பதி மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது. செழுமையான தாவரப்பசுமையுடன் காட்சியளிக்கும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி...
திரிசூர் நகரத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு அம்சம் இந்த வடக்கும்நாதன் கோயிலாகும். தென்கைலாசம் அல்லது விருட்சபாசலம் என்ற சிறப்புப்பெயர்களாலும் அறியப்படும் இந்த கோயில் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பஹவானின் அவதாரமான பரசுராமரால் கட்டப்பட்ட...
கிருஷ்ண பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆன்மீக திருத்தலமாக இந்த திருவம்பாடி கிருஷ்ணா கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள இக்கோயிலைப்பற்றி ஏராளமான புராணிகக்கதைகளும் கூறப்படுகின்றன.
இது திரிசூரின்...
திரிசூர் நகரிலிருந்து 50 கி.மீ தூரத்திலுள்ள ஒரு அமைதியான கிராமம் இந்த திருவில்வாமலா கிராமம் ஆகும். இங்குள்ள பல கோயில்களுக்காகவே இது பிரசித்தமாக அறியப்படுகிறது. இக்கோயில்கள் கிருஷ்ணர் மற்றும் சிவனுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் அதிகம் ராமர் கோயில்கள்...
அத்வைத ஞானியான ஸ்ரீ ஆதி சங்கரர் சமாதியடைந்த ஸ்தலமே இந்த சங்கர சமாதி ஆகும். கி.பி 820 ம் ஆண்டில் தன் 32வது வயதில் ஆதிசங்கரர் திரிசூரில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.
அதே ஸ்தலத்தில் ஒரு சிறு கோயிலும் பக்தர்கள் வழிபடுவதற்காக ஆதிசங்கரின் அழகான உருவச்சிலையும்...
திரிசூர் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ள இந்த பீச்சி அணை திரிசூர் பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களுக்கான நீர்ப்பாசன தேவைக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பின்னாளில் இந்த அணையை ஒட்டியுள்ள பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு நீருற்றுகள் மற்றும் பசுமையான மலர்ச்செடிகளால்...
எழில் நிரம்பிய பீச்சி அணைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதி பீச்சி காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. பலாளிள்ளி காடுகள் மற்றும் நெல்லியம்பதி காடுகள் ஆகியவற்ற உள்ளடக்கிய இந்த சரணாலயம் 125 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது.
19ம் நூற்றாண்டு வரையில்...
பைபிள் டவர் எனப்படும் இந்த பிரம்மாண்ட கோபுர அமைப்பு ‘அவர் லேடி ஆஃப் டாலர்ஸ்’ என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்க ‘பஸிலிகா’ சர்ச் (புத்தேன் பள்ளி) வளாகத்திலுள்ள ஒரு முக்கியமான முக்கியமான சிறப்பம்சமாகும்.
இதன் உச்சியில் பெரிய சிவப்பு...
புத்தேன் பள்ளி அல்லது அவர் லேடி ஆஃப் டாலர்ஸ்’ சர்ச் என்று அழைக்கப்படும் இந்த தேவாலயமானது கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கலையம்சங்கள் நிரம்பியதாகவும், திரிசூர் நகரத்தின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் காட்சியளிக்கிறது.
பல வருடங்கள் கட்டப்பட்ட...
அதிகமாக அறியப்படாத இந்த சர்ப்பா நீர்வீழ்ச்சி அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு ஸ்தலமாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் நெடுஞ்சாலைப்பகுதியில் உள்ளது.
திரிசூர் நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி ஒரு பெருக்கெடுத்து வழியும் அருவி...
அப்பன் தம்புரான் ஸ்மாரகம் என்று அழைக்கப்படும் இந்த நினைவகத்தை ஒரு பாரம்பரிய அருங்காட்சியகம் என்றும் சொல்லலாம். திரிசூரை உருவாக்கிய ராமவர்ம அப்பன் தம்புரான் என்பவருக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இவர் தனது வலிமையான நிர்வாகத்திறனுக்காக சக்தன் தம்புரான் என்ற...
கேரளத்து கலையம்சங்களையும் பாரம்பரியத்தையும் வளர்த்து பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார மையமே இந்த ‘கேரளா கலாமண்டபம்’ ஆகும். நுண்கலைப்பயிற்சிக்கென்றே அமைக்கப்பட்டுள்ள இந்த கல்வி மையத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கி பயிலும்படியான கலைக்கல்வி...
திரிசூர் ஆர்க்கியாலஜிகல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த தொல்லியல் அருங்காட்சியகம் 1938ம் ஆண்டிலேயே நிறுவப்பட்டு பின்னர் 1975ம் ஆண்டில் நாம் தற்போது பார்க்கும் ஒருங்கிணந்த வளாகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அச்சமயம் தனியாக இருந்த புகைப்பட காட்சிக்கூடமும் தொல்லியல்...
கடற்கரைப்பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது அப்பகுதியின் மீன்பிடி கிராமத்துக்கும் விஜயம் செய்து ரசிப்பது உள்ளூர் கலாச்சாரத்தை நன்கு புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இந்த சவக்காட் எனும் மீன்பிடி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி மேற்குத்தொடர்ச்சி...
குடக்கல்லு எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்தலம் குடும்பத்தினருடன் சிற்றுலாச் சென்று மகிழ்வதற்கேற்ற சூழலைக்கொண்டுள்ளது. குடக்கல்லு எனும் பெயருக்கு குடைப்பாறை என்பது பொருளாகும். காளான் போன்ற அல்லது குடை போன்ற வடிவத்தில் செதுக்கப்பட்டிருக்கும் பாறை...