திருநெல்வேலியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம் கீழத்திருவேங்கடநாதபுரம். இவ்வூரில் அமைந்துள்ள கோவில் "செங்காணி" என்று அழைக்கப்படுகிறது. "செங்காணி" என்பதன் பொருள் சிவப்பு நிலம் என்பதாகும்.
ஆனால், இவ்வூரின் பெயர் பின்னாளில் "சங்காணி" என்று மருவி விட்டது. இக்கோவில் சிவன் கோவிலாகும். இது திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடாஜலபதி கோவிலின் அமைப்பை ஒத்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இது வீரபாண்டியன் என்னும் மன்னனால், கி,பி, 12 ஆம் நூற்றண்டில் கட்டப்பட்டது. மற்ற இந்து கோவில்களில் உள்ளது போல் அன்றி, இக்கோவிலின் தலவிருட்சம் மூங்கில் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இக்கோவில் பெருமாள் கோவிலான மேலத்திருவேங்கடநாதபுரம் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது. மேலும் இக்கோவிலுக்கு வெகு அருகில், கிழக்கே சுமார் 250 மீட்டர் தூரத்தில், தென் காளஹஸ்தி கோவில் அமைந்திருக்கிறது.