ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலானது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். தமிழகத்திலுள்ள மிகப் பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்றாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து மன்னர் ராஜகோபாலசுவாமியைத் தரிசிக்கிறார்கள். இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தால், உடலிலுள்ள தீவிரமான பிணிகள் அனைத்தும் முழுமையாக நீங்கி நலம் பெறுவார்கள் என்றதொரு நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது.
இக்கோவிலுக்கு வந்து மன்னர் ராஜகோபாலசுவாமியை தரிசித்தால் தமது பாவங்களெல்லாம், சூரியன் முன் பனிபோல விலகி ஓடிவிடும் என்னும் நம்பிக்கையும் பக்தர்கள் மத்தியில் உண்டு.
தமது ஆயுள்காலத்தில் இக்கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்தால், அது தமது பாவங்கள், பிணிகள் நீங்கி, இயல்பான வாழ்வை மீண்டும் வாழ உதவும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இக்கோவிலின் கலை நுணுக்கமும் கட்டிட நுணுக்கமும், சுற்றுலாப்பயணிகளிடையேயும், உள்ளூர் மக்களிடையேயும் பிரபலமானதற்கு மற்றும் ஒரு காரணமாகும்.