டித்தல் என்ற கடற்கரை வல்சாத் நகரத்துக்கு மேற்கே உள்ளது. அரேபியா பெருங்கடலை ஒட்டி இருக்கும் இதனை கருப்பு மணல் கடற்கரை என்றும் அழைக்கின்றனர். தெற்கு குஜராத்தில் அமைந்துள்ள டித்தல் கடற்கரையை வல்சாத் நகரத்தில் உள்ள ஆட்டோக்கள் அல்லது குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மூலியமாக வந்தடையலாம்.
இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களுடன் இரயில் சேவைகள் மூலம் வல்சாத் நகரம் இணைப்பில் உள்ளது. சாலை வழியாக வல்சாதை அடைய தேசிய நெடுஞ்சாலை-8 வழியாக வர வேண்டும்.
டித்தலில் இரண்டு முக்கிய கோவில்கள் உள்ளன. சாய் பாபா மற்றும் சுவாமி நாராயண் கோவில் தான் அந்த இரண்டும். ஷாந்திதம் கோவிலும் கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது. சுவாமி நாராயண் கோவிலில் கற்களில் அழகிய செதுக்கல்களை காணலாம். இவை கைகளாலேயே செதுக்கப்பட்டவைகள் ஆகும்.
இங்குள்ள சாய் பாபா கோவில் உலக புகழ் பெற்றுள்ளதால் இங்கு தினமும் பக்தர்களின் கூட்டத்தை காணலா



Click it and Unblock the Notifications