Search
  • Follow NativePlanet
Share
» »உலகிலேயே மிகக் காரமான மிளகாய் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில இங்கதாங்க இருக்கு!!

உலகிலேயே மிகக் காரமான மிளகாய் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில இங்கதாங்க இருக்கு!!

கேஹிமாவில் செய்யவேண்டிய 5 அட்டகாசமான விசயங்கள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

By Bala Karthik

நாகாலாந்தின் வடக்கிழக்கு தலைநகரமான கோஹிமாவானது மியான்மரை எல்லையாக பகிர்ந்துக்கொண்டுள்ளது. இவ்விடம் அங்கமி நாகா பழங்குடியினருக்கு புகலிடமாக காணப்பட, இதனை கேவிமா என்றும் அழைக்கப்பட, அதன் பின்னர் ஆங்கிலேயரால் இது கோஹிமா எனவும் வார்த்தை உச்சரிப்பின் சிரமத்தை கருத்தில் கொண்டும் உரைக்கப்பட்டது. கோஹிமாவை நாம் திஹோமா என்றும் அழைக்கிறோம்.

வரலாற்றின் பார்வையில் கோஹிமா என்பதன் பெயராக இரண்டாம் உலகப்போரின் ஜப்பானியர்களுடனான தீவிர சண்டையை அது குறிக்கிறது. மிகவும் பிரசித்திப்பெற்ற தளங்களுள் ஒன்றாக காமன்வெல்த் போர் கல்லறையானது காணப்பட, இங்கே ஆயிரக்கணக்கான வீரர்களின் ஆத்மா அமைதியாக உறங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்த நகரத்தில் அருங்காட்சியகம், வனவிலங்கு உயிரியல் பூங்கா, அழகிய பள்ளத்தாக்கு, சுயமாக நிர்வகிக்கப்படும் கிராமங்கள் என பலவும் காணப்படுகிறது.

கோனோமா கிராமத்திற்கு செல்ல வேண்டும்:

கோனோமா கிராமத்திற்கு செல்ல வேண்டும்:


மலை உச்சியில் இது காணப்பட, வயல்வெளிகளும் சூழ்ந்து காணப்படுவதோடு, இவ்விடம் அங்காமி நாகா போர்வீர பழங்குடியினரின் புகலிடமாகவும் காணப்படுகிறது. இந்த சிறிய குக்கிராமம் மூன்று கிராமங்களாக பிரிந்துக்காணப்பட, ஒவ்வொன்றும் தனி பிரதேசமாகவும் விளங்குகிறது.

சுவாரஸ்யமான விஷயமாக, இந்த கடைசி கிராமம் தான் நாகா பழங்குடியினரால் ஆங்கிலேயர்களை எதிர்த்து பயமின்றி போரிட்டு தோர்த்த ஒரு இடமெனவும் சொல்லப்படுகிறது. இவ்விடமானது உள்ளூர் தாவரம் ஒன்றை கொண்டிருக்க, அதனாலே இவ்விடத்தை குவ்னோரியா என அழைக்கப்பட்டதாகவும், இங்கே உள் நுழைதலும், வேட்டையாடுதலும் கடுமையான குற்றமாகவும் கருதப்படுவதோடு அனுமதியும் மறுக்கப்பட, நாகா கலாச்சாரத்தின் அத்தியாவசத்தின் ஒரு அங்கமாகவும் இது காணப்படுகிறது.

PC: Offical Site

கீடா கடைத்தெருவிற்கு நாம் செல்லலாம்:

கீடா கடைத்தெருவிற்கு நாம் செல்லலாம்:

உணவுக்கான பெயர் பெற்ற ஒரு இடமாக இது சிறந்து விளங்குகிறது. ஆகையால், இந்த நாகா சந்தையை நாம் பார்ப்பதோடு உள்ளூர்வாசிகளால் கறிகளும், காய்கறிகளும், என பூச்சி மற்றும் வண்டுகள் பரிமாற்றம் வரை பார்க்க முடிகிறது. மேலும் இங்கே, தேன்கூடு, பட்டுப்பூச்சி முட்டை, தலைப்பிரட்டைகள், காட்டு தாவரங்கள், போரல், சுவையூட்டும் கொம்பு புழுக்கள், என முட்டை மற்றும் நொதிக்கப்பட்ட டோஃபுவும் காணப்படுகிறது.

நீங்கள் சாரம் மற்றும் சட்டைகளை அணிந்திருக்கும் நாகா பெண்களை சந்திக்க, அவர்களால் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, நாய் இறைச்சி என விற்கப்பட, பாக்குகளை மென்றுக்கொண்டும் காணப்பட, அதனை நீங்கள் விரும்பினால் மட்டுமே உண்ண வேண்டும். தேவையற்ற ஆசையால் உண்டு வயிற்றையும் தலையையும் சங்கடத்தில் தள்ளாதீர்கள் ப்ளீஸ்.

PC: Ritche Asagra

கோஹிமா போர் கல்லறையை பார்க்கலாம்:

கோஹிமா போர் கல்லறையை பார்க்கலாம்:


இந்த கல்லறையை நாம் பார்ப்பதற்கு குறைவான அனுபவமானது தேவைப்பட, நாம் 2337 கல்லறைகளையும், நினைவிடங்களையும் கடந்து இந்த காரிசன் மலையில் வலம் வருகிறோம். ஏப்ரல் மாதம் 1944ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களின் சிறு விசையின் கூட்டாளிகளை ஜப்பானிய படைகள் சூழ, தில்லியும் கைப்பற்றப்பட, ஆனால் இந்த சிறிய இராணுவம், ஜப்பானிய படைகளின் வலிமையை 85,000த்திலிருந்து 20,000 ஆக குறைத்ததாகவும் தெரியவருகிறது.

இந்த நினைவிடத்தின் நுழைவுப்பகுதியில் கல்வெட்டுக்கள் காணப்பட, "வீட்டிற்கு நீ திரும்பினால், அவர்களிடம் சொல், நாளை நீ தான். இன்றைய நாளை நான் கொடுத்துவிட்டேன்" என்ற வசனமும் காணப்படுகிறதாம்.

PC: PP Yoonus

 மௌன்ட் ஜப்பூவிற்கு ஒரு பயணம் போகலாம்:

மௌன்ட் ஜப்பூவிற்கு ஒரு பயணம் போகலாம்:


நாகலாந்தின் இரண்டாவது உயர்ந்த சிகரமாக இது காணப்பட, இந்த இடத்திற்கு செல்ல வழியாக கிக்வாவா கிராமமும் காணப்படுகிறது. இந்த பயணத்துக்கு வழிக்காட்டுதல் கிடைத்திட உச்சியை அடையும் நாம், உடல்ரீதியான மன நிலையுடன் காணப்படக்கூடும். இந்த பயணமானது சற்று கோரிக்கையை வைத்திட, அடர்ந்த மலைக்காடுகளும், கொஞ்சம் மலை ஏற்றமெனவும் நம்மை வரவேற்கிறது.

உச்சியை அடையும் நீங்கள், ஷூகோ பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த காட்சியை ரசித்திட, இதனை ‘நாகலாந்து பள்ளத்தாக்கின் மலர்கள்' என்றும் கூற, பெரும் விதவிதமான அல்லி மற்றும் ரோடெண்ட்ரன் ஆகியவையும் எண்ணற்ற பறவைகளையும் நம்மால் இங்கே பார்க்கவும் முடிகிறது.

PC: Unknown

உலகிலேயே மிகவும் காரமான மிளகாயை ஒரு கடி கடியுங்களேன்:

உலகிலேயே மிகவும் காரமான மிளகாயை ஒரு கடி கடியுங்களேன்:

உலகிலேயே மிகவும் காரமான மிளகாய்களுள் ஒன்றாக பூட் ஜோலோகியா பெருமளவில் இப்பகுதியில் அறுவடை செய்யப்படுகிறது. இந்த மிளகாயை பெரும்பாலான உள்ளூர் உணவகங்களுக்கு அனுப்பி வைக்கவும், வேலிகள் மற்றும் புகைக்குண்டுகள் மூலமாகவும் இவ்வழியில் உலாவும் யானைகளுக்கு பயந்து வைக்கப்படுகிறது.

PC: Thaumaturgist

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X