இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களின் தியாகங்களை எந்நாளும் நம்மால் மறக்க இயலாது. வெவ்வேறு இனங்களாக இருந்தாலும், மதம், மொழி, சாதி என எதையும் பாறாது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டு பல தியாகங்கள் செய்துள்ளனர்.
அவர்களின் போராட்டங்களையும், அதற்கென வெள்ளையர்கள் விதித்த கெடுக்குப்பிடிகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெளிவந்த நம்மவர்களின் அருபெரும்புகழை எப்படி சொன்னாலும் அதற்கு ஈடாகமுடியாது.
அதிலும் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு இந்த 6 கிராமங்களும் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கக்கோரி
இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது உத்திரப்பிரதேசத்தில் உள்ள கக்கோரி எனும் பகுதியாகும். இங்குள்ள ரயில் நிலையம் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது.

ரயில் கொள்ளை
1925ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி இந்திய புரட்சியாளர்கள் தங்கள் போராட்டங்களுக்கு தேவையான செல்வங்களை ரயில் கொள்ளை மூலம் தீர்த்துக்கொள்ள முடிவு செய்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் உடைமைகளை கொள்ளையடித்தனர். இப்போதும் கூட இந்த நிகழ்வுக்கான நினைவுச் சின்னம் இந்த ஊரில் உள்ளது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
லக்னோ
லக்னோ நகரத்தில் பார்க்கவும் ரசிக்கவும் ஏராளமான அம்சங்கள் நிரம்பியுள்ளன.
லக்னோ நகரத்தில் பல கண்ணைக்கவரும் நினைவுச்சின்னங்கள் மற்றும் புராதன கட்டிடங்களும் ஆவாத் நவாப் கால கட்டிடக்கலை மேன்மைக்கு சான்றுகளாக வீற்றிருக்கின்றன.
கேய்சர்பாக் அரண்மனை, தாலுக்தார் ஹால், ஷா நஜஃப் இமாம்பாரா, பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க் மற்றும் ரூமி தார்வாஸா எனும் லக்னோ நகர நுழைவாயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
மேலும், கான்பூர், பாட்னா, அலகாபாத் முதலிய நிறைய இடங்கள் உள்ளன.
wiki

தண்டி யாத்திரை
குஜராத் மாநிலம் ஜலப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தண்டி. உப்பு சத்யாகிரகம் நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டபோது, அதை முதலில் காந்தி தனது சொந்த மாநிலமான குஜராத்திலேயே நடத்தினார்.
Yann

சபர்மதி
சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை நடத்திய நடைபயணம், கடைசியில் தண்டி கடற்கரையில் சென்று உப்பு எடுத்து சிறை சென்றார். அவருடன் ஆதரவாளர்கள் பலர் சென்றனர். இது சிறப்புமிக்க வரலாற்று கிராமம்.
wiki

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
சூரத், வபி, பூர்ணா காட்டுயிர் சரணாலயம் என நிறைய இடங்கள் உள்ளன.
Rahul Bhadane

சவுரி சவுரா
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ளது சவுரி சவுரா என்ற நகரம். இதுவும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும்.
Nitishkumarojha

ஒத்துழயாமை இயக்கம்
இந்த இடத்தில் தான் முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1922ம் ஆண்டு பிப்ரவரி 5ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வின் காரணமாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

சவுரி சவுரா ஷஹீத் ஸ்மரக் சமிதி
சவுரி சவுரா ஷஹீத் ஸ்மரக் சமிதி 1973ம் ஆண்டு இங்கு போரிட்ட வீரர்களுக்காக அவர்களின் நினைவாக கட்டப்பட்டது.

ஜான்சி
ஜான்சி ராணி லக்குமி பாய் எனும் விடுதலை வீரர் பற்றி நம்மில் பலர் கேள்விபட்டிருப்போம்.
Ravi9889

சுற்றுலா
இந்த இடங்களில் நீங்கள் சுற்றுலா செல்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
Ravi9889

சம்பரன்
இந்திய விடுதலை வரலாற்று போராட்டத்தை காந்தி துவங்கியது இந்த இடத்தில்தான்.

பரக்பூர்
மங்கள்பாண்டே ஆங்கிலேயரை தாக்கிய இடம் இதுதான். 1857ல் இந்த புரட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நினைவாக சாகித் மங்கள் பாண்டே உதயன் ஆரம்பிக்கப்பட்டது.
Biswarup Ganguly



Click it and Unblock the Notifications




