அனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக விளங்குகிறது அனந்த்.
பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியில் அதிகமாக ஈடுபடும் நாடுகளில் இந்தியாவும் இப்புரட்சியால் முக்கிய பங்கு வகிக்கிறது. அனந்த் நகரம் குஜராத் மாநிலத்தின் தலைநகரமான காந்திநகரிலிருந்து 101 கி.மீ தொலைவில், வடோடராவிற்கும், அகமதாபாத்திலிருக்கும் மேற்கு இரயிலகத்திற்கும் நடுவே உள்ளது.
ஸ்ரீ ரோகாடிய ஹனுமான்ஜி கோவில், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் வீர் விட்டல்பாய் படேல் நினைவகம், சுவாமி நாராயண் கோவில் போன்றவைகள் தான் அனந்த்திலுள்ள முக்கிய ஈர்ப்புகளாகும். ரன்சோர்டோரை டாகோர் கோவில் அனந்த்திற்கு வடகிழக்கில் 43 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவகம்
சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக உருவாக்கப்பட்ட நினைவகம் இதுவாகும். இது குஜராத்திலுள்ள ஷஹிபாக் வட்டாரத்தில் உள்ள மோட்டி ஷஹி மஹாலில் அமைந்துள்ளது. இந்த நினைவகம் 1980-ஆம் ஆண்டு மார்ச் 7-ல் திறக்கப்பட்டது



Click it and Unblock the Notifications




