Search
  • Follow NativePlanet
Share
» »கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட ‘காட்டேரி குழந்தை’ (vampire child) உடல் கண்டுபிடிப்பு!

கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட ‘காட்டேரி குழந்தை’ (vampire child) உடல் கண்டுபிடிப்பு!

'வேம்பையர்' தொடர்பான அதாவது இறப்பே இல்லாத மனிதர்கள் பற்றிய விறுவிறுப்பான, சுவாரஸ்யமான கதைகளை ஆங்கில திரைப்படங்களிலும், நாடங்களிலும் நாம் பார்த்து ரசித்திருப்போம்! நமக்கு என்ன தான் அந்த கதைகள் பிடித்து இருந்தாலும், அவை எல்லாம் கற்பனை மட்டும் தான் நிஜமல்ல என்று நினைத்து இருப்போம், ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, கால்கள் பூட்டிய நிலையில் புதைக்கப்பட்ட 'வேம்பையர்' குழந்தை'யின் (vampire child) உடலை கண்டுபிடித்துள்ளனர்!

நாம் மிகவும் பார்த்து ரசிக்கும் 'வேம்பையர்' தொடர்பான படங்கள்

Twillight, Vampire Diaries, The originals, True blood, The last voyage இதுபோன்ற பல 'வேம்பையர்' தொடர்பான திரைப்படங்களையும், நாடகங்களையும் நாம் பார்த்து ரசிக்கிறோம். நாள் முடிவில் நம் மனதில் அவை தொடர்பான எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தாலும் முற்றிலும் கற்பனை தான் என்று உதறி தள்ளிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவோம். ஆனால் 'வேம்பையர்' யாவும் கட்டுக்கதைகள் இல்லை, உண்மை தான் என்றதற்கு சான்று இப்போது கிடைத்துள்ளது.

1

போலந்தில் 'வேம்பையர்' குழந்தை உடல் கண்டுபிடிப்பு

போலந்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 400 ஆண்டுகள் பழமையான ஒரு சிறு குழந்தையின் எலும்புக்கூட்டை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதன் காலில் இரும்பு பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது, மேலும் அதன் முகம் கீழே நோக்கும் வகையில் புதைத்துள்ளது, அதாவது குழந்தை இறந்ததிலிருந்து திரும்பாது என்று மக்களுக்கு உறுதியளிக்க பூட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

5 முதல் 7 வயதுள்ள குழந்தை

எலும்புத் துண்டுகள் குழந்தையின் 5 முதல் 7 வயதுக்கு இடைப்பட்ட வயதைக் குறிக்கின்றன, இது ஒரு காலில் முக்கோண பூட்டு இணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அக்கால மரபுகளின்படி, ஒரு சடலத்தை அதன் கல்லறையில் பாதுகாக்க இத்தகைய பூட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

கோபர்நிகஸ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வு

போலந்தின் டோருனில் உள்ள நிக்கோலஸ் கோபர்நிகஸ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தென்கிழக்கு போலந்தில் உள்ள பைன் கிராமத்தில் இந்த துயரமான கண்டுபிடிப்பை மேற்கொண்டனர். அந்த இடத்தில் 30 பேரின் எச்சங்களுடன் சிசுவின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஏற்கனவே பெண் உடல் கண்டுபிடிப்பு

கிரேக்க மொழியில் இருந்து 'இறந்தவர்களின் நகரம்' என்று மொழிபெயர்க்கப்பட்ட 'நெக்ரோபோலிஸ்' என்ற இடத்தில் தான் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு ஒரு 'காட்டேரி' பெண் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகும், அவர் தனது பெருவிரலில் பூட்டுடன் புதைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்ததக்கது.

ஆய்வாளர் டேரியஸ் பாலிஸ்கியின் கூற்று

அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் டேரியஸ் பாலிஸ்கியின் கூற்றுப்படி, மூடநம்பிக்கை கொண்ட குடும்பங்கள் பெரும்பாலும் பிரிந்து சென்ற உறவினர்களின் உடல்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறினார். இவையாவும் அவர்கள் அந்த உடல் வழியே எழுந்து வந்து விடக் கூடாது என்கிற காரணத்திற்காக மட்டும் தான்.

2

காலுக்கு அடியில் பூட்டு

காலுக்கு அடியில் இருக்கும் பூட்டு என்பது வாழ்க்கையின் ஒரு கட்டத்தை மூடுவதைக் குறிக்கிறது மற்றும் இறந்தவரின் திரும்பி வருவதற்கு எதிராகப் பாதுகாப்பதாகும், இது அநேகமாக அஞ்சப்படுகிறது. இத்தகைய நடைமுறைகள் நாட்டுப்புற நம்பிக்கைகளில் தோன்றின, சில சமயங்களில் விவரிக்கப்படுகின்றன. இவற்றை வைத்து பார்க்கும் போது இது 'வேம்பையர்' குழந்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த காலத்து நம்பிக்கைகள்

அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சடங்குகள், ஒரு நபரை முகம் குப்புறப் புதைக்கும்போது, இறந்தவர்கள் தரையில் கடிப்பார்கள் என்றும், உயிருடன் இருப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள் என்றும் நம்புவதாக பதிவுகள் கூறுகின்றன. அந்த நேரத்தில், இறந்தவர்களின் முகத்தை கீழே வைப்பது, தலை அல்லது கால்களை வெட்டுவது, எரிப்பது மற்றும் கல்லால் அடித்து நொறுக்குவது போன்ற பல விஷயங்களை மக்கள் பின்பற்றினர் என்று பாலின்ஸ்கி மேலும் கூறினார்.

ஒரே மாதிரியான பச்சை துண்டு

குழந்தையின் கல்லறைக்கு அருகில், ஐந்து குழந்தைகளின் சடலங்களின் "புதிர் கிளஸ்டர்" ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன, அவற்றில் ஒன்று பச்சை நிற தாடை துண்டு இருந்தது. கடந்த ஆண்டு தோண்டியெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்பு கூட்டிலும் இதேபோன்ற பச்சை நிறம் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது 'வேம்பையர்' குழந்தை தானா

அவர்களின் களப்பணியின் போது, அவர்கள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் அசாதாரண புதைக்கப்பட்டதைக் கண்டுபிடித்தனர், அவளுடைய கருவின் எச்சங்கள் வெளித்தோற்றத்தில் பாதுகாக்கப்பட்டன என்றும் தெரிய வந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் உடல் போன்று ஏற்கனவே பல கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆகையால் இவை 'வேம்பையர்' குழந்தையாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று யூகிக்கலாம்!

More News

Read more about: travel guide news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+