Search
  • Follow NativePlanet
Share
» »மகாபலிபுரத்தில் அதைப் பற்றி ஏன் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தெரியுமா?

மகாபலிபுரத்தில் அதைப் பற்றி ஏன் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தெரியுமா?

பஞ்சபாண்ட குகைக்கோயில்கள் மகாபலிபுரம் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும்.

By Udhaya

மகாபலிபுரம் - பேரைக் கேட்டவுடனே மனம் சிலாகிக்கிறதா... அப்போ நீங்க சென்னையை சுற்றி வசிப்பவரா இருக்கணும்.... காதலிப்பவரா இருக்கணும்.. இல்ல அதிகம் சினிமா பார்ப்பவரா இருக்கணும்... அப்ப மகாபலிபுரம் காதலின் சின்னமா என்று கேட்கிறீர்களா

மகாபலிபுரம் தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளம் ஆகும். காதலர்கள் அதிகம் மொய்க்கும் பகுதி என்று நம்பப்பட்டாலும், பலருக்கு அதன் அருமைத் தெரிவதில்லை.

மகாபலிபுரம் அதன் வரலாற்று சிறப்புக்கும், கட்டடக்கலைக்கும் பெயர் பெற்றது. சிக்கலான சிற்பங்களும், பாறைகளை செதுக்கி கட்டிய கட்டிடங்களையும் தவறாமல் காண வேண்டும். சரி...அப்படி மகாபலிபுரத்தில் என்னதான் இருக்கு ?

மகாபலிபுரம்

மகாபலிபுரம்

மகாபலிபுரம் 7ம் நூற்றாண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ கட்டப்பட்டிருக்கவேண்டும் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

7ம் நூற்றாண்டு என்பது தற்போதைய ஆண்டு கணக்கீட்டின் படி , 0700 முதல் 0799 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், அதாவது குறைந்தபட்ச அளவீட்டில் 1200 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டிருக்கவேண்டும் என்கின்றனர் அவர்கள்.

PC: Andrey Korchagin

பஞ்சபாண்டவ குகையின் தூண்கள்

பஞ்சபாண்டவ குகையின் தூண்கள்

மகாபலிபுரத்தை பல்லவர்கள் ஆட்சி செய்தபோது பல்வேறு குடைவரை கோயில்களைக் கட்டினர். அவற்றுள் முக்கியமானவையே இந்த பஞ்சபாண்டவ கோயில்.

தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கே சவால் விடும் வகையில் ஏறக்குறைய 1300 ஆண்டுகள் கட்டடத்தைத் தாங்கி நிற்கின்றன இந்த தூண்கள்.

PC: Sivanjali Sivapatham

கற்சிற்பங்கள்

கற்சிற்பங்கள்

மகாபலிபுரத்தில் பல்வேறு மனித உருவங்கள், யானை போன்ற விலங்குகள் பொறிக்கப்பட்ட பாறையைக் காணலாம்.

இவை அனைத்தும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. கிட்டத்தட்ட நூறு உருவங்கள் மகாபலிபுரம் பாறைகளில் வரையப்பட்டுள்ளன.

PC: Manishmjoshi

7ம் நூற்றாண்டு குகைக்கோயில்

7ம் நூற்றாண்டு குகைக்கோயில்


பல்லவர்களால் கட்டப்பட்ட பஞ்சபாண்டவ குகைக் கோயில்கள் எளிமையானதாகவும், தனித்தன்மையுடையதுமாக உள்ளது.

செவ்வக வடிவிலான குகைக் கோயில் வில் போன்று வளைந்த பாறைகள் கொண்டு, திடமான தூண் கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

மலையைக் குடைந்து வடிவங்களைச் செதுக்கி கோவிலை உருவாக்கியுள்ளனர் பல்லவர்கள்.

PC: Patrick N

இடம்

இடம்

பஞ்சபாண்டவ குகைக் கோயில், மற்ற பிற வரலாற்றுச் சின்னங்களுக்கு அருகிலேயே, மலையின் மீது அமைந்துள்ளது.

சென்னைக்கு மிக அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

PC: Rajataditya RK

முகப்பு

முகப்பு

தமிழகத்தின் வரலாற்றுச் சின்னங்களில் முக்கியமானவையாகக் கருதப்படும் பல்லவர்கால சின்னங்கள் மகாபலிபுரம் முழுவதும் பரந்து காணப்படுகிறது.

வராஹ குகைக் கோயில், கிருஷ்ண மண்டபம், மகிசாசூரமர்த்தினி மண்டபம் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

PC: Gautamoncloud9

சென்னை டூ மகாபலிபுரம்

சென்னை டூ மகாபலிபுரம்

சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மகாபலிபுரம்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணிக்கும்போது வழியில் பல இடங்களை கண்டு செல்லலாம்.

PC:Vimal Prakash J

பஞ்சரதங்கள்

பஞ்சரதங்கள்

பஞ்சரதங்கள்

PC: Chemose

கற்சிலைகள் செதுக்கப்பட்ட பாறை

கற்சிலைகள் செதுக்கப்பட்ட பாறை

PC: Patrick N

மாமல்லபுரம் கோவில்

மாமல்லபுரம் கோவில்

PC: Sai2020

More News

Read more about: travel பயணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+