Search
  • Follow NativePlanet
Share
» »மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?

மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருவிழாவின் சிறப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை வெகு விமர்சியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். காலம் காலமாக நடக்கும் இந்த 10 நாட்கள் திருவிழா வைபோகத்தில் மதுரை ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் மிகப்பெரிய திருவிழா இது. ஆனால், மதுரை கள்ளழகரை சிறப்பிக்கவே, வைகை ஆறு பாயும் ஏனைய இடங்களிலும் பெருமாள் கோயில்களில் உள்ள பெருமாள் சிலைகளுக்கு கள்ளழகர் வேடம் போட்டு ஆற்றில் இறக்கி கொண்டாடுகின்றனர்!

தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மதுரை

தமிழ்நாட்டின் வசீகரமான நகரமான மதுரை, அதன் பாரம்பரியங்களுக்கும் கலாச்சார அதிசயங்களுக்கும் பெயர் பெற்றது. இந்த துடிப்பான நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் அதன் செழுமையான பாரம்பரியத்திற்கு சான்றாகும். இருப்பினும், உண்மையான காட்சி ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது வெளிப்படுகிறது. இந்த மாபெரும் கொண்டாட்டம் நகரத்தை அதன் வண்ணமயமான சடங்குகள் மற்றும் கலகலப்பான ஊர்வலங்களுடன் உயிர்ப்பிக்கிறது, இது உணர்வுகளுக்கு உண்மையான விருந்தாக அமைகிறது.

maduraikallazhagarfestival

இந்தியாவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று - சித்திரை திருவிழா

தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகின் மிக நீண்ட கொண்டாட்டங்களில் ஒன்றாகும், இது இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும். உள்ளூர் தெய்வங்களின் புனைவுகளை மறுபரிசீலனை செய்யும் இந்த பிரமாண்டமான காட்சியைக் காண இந்தியா மற்றும் அதற்கு அப்பால் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூடுகிறார்கள். இந்த விழாக்களில் மீனாட்சி தேவிக்கு ஒரு விசித்திரமான முடிசூட்டு விழா மற்றும் அவரது திருமணத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டம் ஆகியவை அடங்கும்.

அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று தெரியுமா?

தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. மீனாட்சி வீதியுலா, பட்டாபிஷேகம், திருக்கல்யாணமும் மறுநாள் நடக்கும் தேரோட்டமும் என விழாக்கள் தொடர்கின்றன.

வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலிக்கும் அழகர்

இதனிடையே, அழகர் வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை. தல்லாகுளத்தில் எதிர்சேர்வை காணும் அழகர், பின்னர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

maduraikallazhagarfestival

கலாச்சார ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் மதுரை சித்திரை திருவிழா

மீனாட்சியின் முடிசூட்டு விழாவும், சிவபெருமானுடனான அவரது திருமணமும், அழகர் நிகழ்வின் வைணவக் கொண்டாட்டமும், சமய எல்லைகளைக் கடந்த ஒரு அழகான கொண்டாட்டத்தில் ஒன்றாக வருகின்றன. இந்த கொண்டாட்டம் ஒரு தெய்வீக ஒற்றுமையை நினைவுபடுத்துவது மட்டுமல்லாமல், மதுரையின் இதயத்தில் மத நல்லிணக்கத்தையும் கலாச்சார ஒற்றுமையையும் வளர்க்கும் பல்வேறு பாரம்பரியங்களின் ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கிறது.

மதுரையில் சுற்றியுள்ள பகுதிகளில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள்

இதே போன்று மதுரையில் நடைபெறும் கள்ளழகர் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், மதுரையின் சுற்று வட்டார இடங்களில் உள்ள கோயில்களில் பெருமாளுக்கு கள்ளழகர் வேடமிட்டு ஆற்றில் இறக்கி ஏகபோகமாக கொண்டாடுகின்றனர்.

1. சிவகங்கை, மானா மதுரையில் உள்ள வீர அழகர் பெருமாளுக்கு கள்ளழகர் வேடமிட்டு வைகை ஆற்றில் இறக்கி கொண்டாடுகின்றனர்.

maduraikallazhagarfestival

2. சிவகங்கை திருப்புவனத்தை சேர்ந்த பாலகிருஷ்ண பெருமாளும் கள்ளழகர் கோலத்தில் காட்சி தந்து ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

3. உண்மையில் மதுரையை அடுத்த சோழவந்தானில் உள்ள ஜலகை நாராயண பெருமாளுக்கு கள்ளழகர் வேடமிட்டு தேனூர் வைகை ஆற்றில் இறங்குகிறார். மதுரை கள்ளழகருக்கும் முன்னர் இவர் தான் ஆற்றில் இறங்கிய முதல் அழகர் என்று கூறப்படுகிறது.

4. ராமநாதபுரத்தில் உள்ள பரமக்குடியில் அமைந்துள்ள சுந்தரராஜப் பெருமாள் அழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்குகிறது.

5. தேனியை சார்ந்த அம்பாசமுத்திரம் ரங்கநாத பெருமாள், உப்பர்பட்டி வரதராஜப் பெருமாளும் கள்ளழகர் கோலத்தில் காட்சி தந்து ஆற்றில் இறங்குகின்றனர்.

6. திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தர ராஜ பெருமாள், அய்யம்பாளையம் வரதராஜ பெருமாள், ஆணைப்படி நரசிம்ம பெருமாள் ஆகியோரும் அழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்குகின்றனர்.

இவை எல்லாமுமே மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை சிறப்பிக்கும் விதமாகவே ஒவ்வொரு இடத்திலும் கொண்டாடப்படுகிறது!

More News

Read more about: madurai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+