கண்டல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த 'பிரபு மூக்கு' என அறியப்படும் சிகரம் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த வெலிங்க்டன் பிரபுவின் மூக்கைப்போன்று இருப்பதாக இப்படி ஒரு விசித்திர பெயரினைப் பெற்றுள்ளது. நாகத்தின் தலையைப்போன்று இருப்பதால் இதற்கு நாக்பாணி என்ற மற்றொரு உள்ளூர் பெயரும் உண்டு. இதன் உச்சியை கடுமையான மலை ஏற்றத்திற்குப்பிறகே அடையமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் உச்சியை அடைந்த பிறகு காணக்கிடைக்கும் காட்சிகள் பிரமிக்க வைக்கும் இயல்பு கொண்டவை. சிகரத்திலிருந்து கீழே மலையைச்சுற்றிலும் உள்ள பசுமைச்சமவெளியை கண்குளிர பார்த்து ரசிக்க முடிகிறது.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
உயர்ந்த சிகரங்களும் பசுமையான பள்ளத்தாக்குகளும் பின்னணியில் அழகு சேர்த்திருக்க - எழிலுடன் அமைந்திருக்கிறது இந்த துங்கர்லி ஏரி. இந்த ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள துங்கர்லி அணை லோனாவலாவின் சிற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
சஹயாத்ரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் பிரதேசமான இந்த துங்கர்லி கிராமத்திலிருந்து பார்த்தால் கீழேயுள்ள ராஜ்மச்சி, லோனாவலா மற்றும் லோஹாகட் போன்ற பகுதிகள் அழகாக தெரிகின்றன.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
உங்களுக்கு மலை ஏற்றம் மிகவும் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக செல்ல வேண்டிய இடம் ராஜமச்சி. இது மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மலை ஏற்றத்துக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும்.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
நீங்கள் மலை ஏற்றத்துக்கு புதியவரோ அல்லது ஒரு தேர்ந்த மலை ஏறியோ உங்களுக்கு ஏற்ற இலகுவான அல்லது கடினமான மலைப்பிரதேசங்கள் இங்கு மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் சஹயாத்ரி மலைத்தொடரில் உள்ளன.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
புதிய மலை ஏறிகளுக்கு இங்குள்ள ராஜமச்சி - கண்டலா மலையேற்றப்பாதை, துங்கர்லி ஏரி, மற்றும் லோனாவலா பாதை போன்றவை மிகக்கடினமாக இருக்கக்கூடும்.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
மலையேறிகள் ராஜமச்சியிலிருந்து கொண்டனா குகைகளுக்கு செல்லும் பாதை அல்லது உல்லாஸ் ஆற்றுக்கரைப் பாதை போன்றவற்றையும் மலையேற்றத்துக்கு தேர்ந்தெடுக்கலாம்.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
லோனாவலா பகுதியில் உள்ள குண்டலி ஆற்றின் குறுக்கே இந்த வலவண் ஏரி உருவாக்கபட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏரி வலவண் அணை என்றும் அழைக்கப்படுகிறது.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
இந்த ஏரியின் ஒரு புறத்தில் அழகிய பூங்காத்தோட்டம் ஒன்றும் உள்ளது. ஏரி, அணத்தேக்கம், பூங்காத்தோட்டம் யாவும் ஒன்று சேர்ந்த இந்த ஸ்தலம் ஒரு சிறந்த சிற்றுலா மையமாக விளங்குகிறது.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
எதிரி எளிதில் அணுகி நுழைய முடியாதபடி கட்டப்பட்டுள்ளது இந்த துங் கோட்டை. கடின்காட் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த கோட்டை மராத்தா மன்னர்கள் பயன்படுத்திய கோட்டையாக இருந்திருக்கிறது.

❑ பிரபு மூக்கு மலையேற்றம்
3500 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கோட்டை செங்குத்தான ஏறும் பாதையை கொண்டுள்ளதால் பயணம் மிக சவாலாக இருக்கும்.



Click it and Unblock the Notifications




