Search
  • Follow NativePlanet
Share
» »நஷ்டத்தில் இயங்கும் இந்திய ரயில்வே - ஒரு கி.மீ.க்கு ரூ.1.38 செலவழித்து, ரூ.0.73 பைசாவை வருவாயாகப் பெறுகிறது!

நஷ்டத்தில் இயங்கும் இந்திய ரயில்வே - ஒரு கி.மீ.க்கு ரூ.1.38 செலவழித்து, ரூ.0.73 பைசாவை வருவாயாகப் பெறுகிறது!

தினமும் 12,000 ரயில்களுக்கும் மேல் இயக்கி, 1.2 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்து வரும் இந்திய ரயில்வே உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். வந்தே பாரத், ராஜ்தானி எனும் அதிவேக ரயில்களில் துவங்கி, மகாராஜாஸ், பேலஸ் ஆன் வீல்ஸ் எனும் சொகுசு ரயில்கள், ஊட்டி மலை ரயில், டார்ஜிலிங் மலை ரயில் எனும் பாரம்பரிய ரயில்கள் உட்பட, தினமும் அதிவேக போக்குவரத்தையும், இணைப்பையும், சுற்றுலாவையும் மேம்படுத்தி வரும் இந்திய ரயில்வே நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

Indian railways

ஒவ்வொரு பயணிக்கும் 47% தள்ளுபடியை வழங்கும் இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்தில் ஒன்றாகும், மேலும் ஒரு நாளைக்கு பல ஆயிரம் ரயில்களை இயக்குகிறது. இது இந்தியா முழுவதிலுமிருந்து தினமும் கோடிக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இருப்பினும், ரயில்வே பல ஆண்டுகளாக பயணிகள் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீண்டும் நாடாளுமன்றத்தில், பொதுப் போக்குவரத்து நிறுவனம் அதன் கட்டணத்தில் சுமார் 47% தள்ளுபடியை வழங்கி வருவதாகக் கூறினார்.

இந்திய ரயில்வேயில் இயங்கி வரும் பல்வேறு ரயில்கள்

வேகம், நோக்கம் மற்றும் சேவை நிலைகளின் அடிப்படையில் இந்திய ரயில்வே பல்வேறு வகையான ரயில்களை இயக்குகிறது.

1. எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவேக ரயில்கள் - சதாப்தி, ராஜ்தானி

2. பயணிகள் மெயில் ரயில்கள்

3. பயணிகள் ரயில்கள் - குறுகிற தூரங்களுக்கு ஏற்ற பெரும்பாலான நிலையங்களில் நிறுத்தப்படும் பேசஞ்சர் ரயில்கள்

4. சொகுசு ரயில்கள் - டெக்கான் ஒடிஸி, மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ், பேலஸ் ஆன் வீல்ஸ்

5. அரை-அதிவேக ரயில்கள் - வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

6. சுற்றுலா ரயில்கள் - இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் பாரத் கவுரவ் ரயில்கள்

7. புறநகர் ரயில்கள் உள்ளூர் ரயில்கள் - மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் டெல்லி புறநகர் ரயில்கள்

8. மெட்ரோ ரயில்கள் - இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, பெங்களூருவில் இயங்கும் ரயில்கள்

9. சிறப்பு ரயில்கள் - கரிப் ரத், துரந்தோ எக்ஸ்பிரஸ், ஜன் சதாப்தி

10. சரக்கு ரயில்கள் - நாடு முழுவதும் சரக்கு மற்றும் பொருட்களை கொண்டு செல்கிறது.

11. ராணுவ ரயில்கள் - பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்லப் பயன்படுகிறது.

12. பாரம்பரிய ரயில்கள் - யுனெஸ்கோ பட்டியலிடப்பட்ட மலை ரயில்களான ஊட்டி மற்றும் டார்ஜிலிங் மலை ரயில்கள்

13. கூடிய சீக்கிரத்தில் இந்தியாவை அலங்கரிக்கப் போகும் புல்லட் ரயில்

Indian railways

செலவு ரூ.1.38, ஆனால் வரவு ரூ.0.73 பைசா மட்டுமே

நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ், "ஒரு பயணியை ரயிலில் 1 கி.மீ. சுமந்து செல்வதற்கான செலவு ரூ.1.38 ஆகும், ஆனால் பயணிகளிடம் கட்டணமாக ரூ.0.73 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது, அதாவது சுமார் 47% தள்ளுபடி விலையில் பயணிகள் பயணிப்பதாக ரயில்வே அமைச்சர் கூறினார். இதனால் இந்திய ரயில்வே ஆண்டுக்கு சுமார் ரூ. 60,000 கோடி செலவாகிறது. ஆம்! இந்தியாவில் ரயில் கட்டணம் அனைத்து அண்டை நாடுகளிலும் மிகக் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடுகளின் கட்டணத்தை பாருங்கள்

இந்திய ரயில்வேயின் கட்டணத்தை மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் மலிவான விலையில் ரயில்வேயை இயக்கி வருகிறது. இந்திய ரயில்வேயின் கட்டணத்தை பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்திய ரயில்வே நம்மிடம் மிகக் குறைந்த கட்டணம் வசூலிப்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. ஒரு பயணி ரூ.350 கி.மீ. தூரம் பயணிக்க, இந்தியாவில் ரூ.121 செலுத்தினால் போதும், ஆனால், அதுவே பாகிஸ்தானில் ரூ.436, வங்கதேசத்தில் ரூ.323 மற்றும் இலங்கையில் ரூ.413 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியா வசூலிக்கும் கட்டணத்தை விட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 10 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Indian railways

பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த முயற்சி

எதிர்காலத்தில் கூட்ட நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, தடுப்பு நடவடிக்கைகளாக மொத்தம் பத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திடீர் பருவகால நெரிசல்கள் ஏற்படும் இந்தியா முழுவதும் 60 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அஷ்வினி வைஷ்னாவ் கூறினார். இந்த அனைத்து நிலையங்களிலும் நிரந்தரமான தடுப்புப் பகுதி முழு அணுகல் கட்டுப்பாட்டுடன் கட்டப்படும், மேலும் இவற்றில் சமீபத்திய நவீன சிசிடிவி கேமராக்கள், வாக்கி-டாக்கிகள் பொருத்தப்படும், மேலும் அடையாளம் காணப்பட்ட அனைத்து படிகளும் செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்பான பயணத்திற்கு உறுதி

5-6 ஆண்டுகளில் கவாச் என்ற தானியங்கி ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் முழு ரயில்வே வலையமைப்பையும் உள்ளடக்கும் உறுதியுடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் வைஷ்ணவ் கூறினார். ரயில்வே மற்றும் பாதுகாப்பு ஆகியவை அரசியலுக்கு அப்பால் மக்கள் உயர வேண்டிய இரண்டு துறைகள் என்றும், இவை நாட்டிற்கான தேவைகள் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

ஆயிரம் இருந்தாலும், இந்திய ரயில்வே மக்களுக்கு லாப நோக்கமின்றி பாதுகாப்பான பயணத்தை மட்டும் வழங்கி வருகிறது. இதனை குறை கூறாமல், போது சொத்துக்களை நாசம் செய்யாமல் பயணிப்பது நம் கடமை!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+