Search
  • Follow NativePlanet
Share
» »பாண்டியரின் மர்மச் சுரங்க கோட்டை!

பாண்டியரின் மர்மச் சுரங்க கோட்டை!

பொன்னும், முத்தும் நிறைந்த செழிப்புமிக்க பாண்டியரின் கோட்டை எங்குள்ளது தெரியுமா ?. இக்கோட்டையைக் கண்டு ஆங்கிலேயர்களே கண்டு அஞ்சியுள்ளனர்.

தமிழகத்தை ஆண்ட வேந்தர்களில் ஒருவரே பாண்டியர்கள். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கேரளாவிற்கு உட்பட்ட சில பகுதிகளை செழிமை மிக்கதாக ஆட்சி செய்துவந்த இவர்களுக்கு இந்தியாவில் வேறெந்த மன்னர்களுக்கும் இல்லாத மிக நீண்ட வரலாறு உண்டு. பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்னும், முத்தும் நிறைந்த நகராகவும், இவர்களது போட்டைகளே முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரத் தோற்றம் கொண்டதாக இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. இதில், ஆங்கிலேயர்களே கண்டு அஞ்சிய பாண்யர்களின் கோட்டை எங்குள்ளது தெரியுமா ?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறந்தாங்கி சாலையில் கானாடுகாத்தான் அடுத்துள்ளது கீழாநிலைக் கோட்டை கிராமம். இப்பகுதி இந்தப் பெயர் பெறக் காரணமே இங்கே உள்ள சிறிய காட்டில் மறைந்து கிடக்கும் பாண்டியரின் கோட்டையே. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோட்டை உள்ளது.

harpreet singh

கீழா நிலைக் கோட்டை

கீழா நிலைக் கோட்டை

சிறிய காட்டின் நடுவே எதிரிகள் யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு பல அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள பாண்டிய மன்னரின் கோட்டையான கீழாநிலைக் கோட்டை கட்டுமானத்தில் தனித்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இக்கோட்டையின் மதில்சுவர்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரத்துடன் தோற்றமளிப்பதை காண முடியும்.

Draco2008

மதில் சுவற்றில் பாதை

மதில் சுவற்றில் பாதை

கி.பி 17ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த பாண்டியர்கள் தங்களுக்கான ஆயுதக் கிடங்காகவும், பாதுகாப்பிற்காகவும் கட்டப்பட்டது கீழா நிலைக் கோட்டை. கோட்டையைச் சுற்றிலும் பிரம்மாண்டமான மதில் சுவர்களைக் கட்டி அதிலேயே பல பாதுகாப்பு அரண்களும், அவசர காலத்தில் தப்பிக்கும் வகையிலான சுரங்க வழிகளும் அமைந்துள்ளது.

Draco2008

கோட்டையின் கம்பீரம்

கோட்டையின் கம்பீரம்

புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் காணப்படும் கோட்டைகள் பெரும்பாலும் சிறிய அளவிலான நிலபரப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த கீழாநிலை கோட்டை மட்டும் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பல அடுக்குகளாக பிரித்து கட்டியுள்ளனர். கோட்டையின் உள்ளே இருந்தபடியே வெளியில் உள்ள எதிரிகளை வீழ்த்தும் வகையில் அரண்கள் உள்ளன.

Melanie Renzulli

பாண்டியரின் பிரங்கி

பாண்டியரின் பிரங்கி

கீழா நிலைக் கோட்டைச் சுவர்களின் உயரம் சுமார் 30 அடிக்கும் மேல் உள்ளது. கோட்டையைச் சுற்றிலும் பாதுகாவல்கள் நிற்கும் வகையில் தலங்களும் உள்ளன. கோட்டைக்கு நடுவே கொடி மரமும், அதன் முன் சிறிய பீரங்கியும் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Shreyank Gupta

ஆங்கிலேயரின் தாக்குதல்

ஆங்கிலேயரின் தாக்குதல்

எளிதில் தகர்க்கமுடியாத இக்கோட்டையினை சுற்றிவளைத்த ஆங்கிலேயர்ப் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக கோட்டைச் சுவற்றில் குண்டுகள் பாய்ந்த தடங்கள் உள்ளன. இதனைக் கொண்டு இக்கோட்டை சிறிது காலம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும் என்று கணிக்க முடிகிறது.

Melanie Renzulli

நர்த்தமலை

நர்த்தமலை

புதுக்கோட்டையில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களில் ஒன்று நர்த்தமலை. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சாலையில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இங்கு உள்ள கற்கோவில் பிரசிதிபெற்றது.

Piorajasekar

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+