கொல்ஹு ஹில் ஜார்க்கண்ட்டில் உள்ள சத்ராவின் புகழ்பெற்ற சிறப்புகளில் ஒன்றாகும். மலை உச்சியில் இருந்து பார்க்கும் வனாந்திர பார்வை உங்களை கண்டிப்பாக மூச்சடைக்க செய்து விடும். மிகப் பிரபலமான கொல்ஹு மேளா வருடத்தில் இரண்டு முறை ராம்நவமி மற்றும் மகா வசந்த் பஞ்சமிக்கு முன்பு கொண்டாடப்படுகிறது. மலையுச்சியில் அன்னை கௌலெஸ்ஹ்வரிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவில் அடைய செங்குத்தான மலை மீது ஏறிச் செல்ல வேண்டும்.
பிச்ஹ்கிலியா நீர்வீழ்ச்சி சத்ரா சுற்றுலாவில் மிக முக்கிய இடத்தை பெறுகின்றது. இந்த தெள்ளத் தெளிவான நீர்வீழ்ச்சியின் அழகு பார்வையாளர்களுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. இந்த அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி நகரத்தில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது. இது சத்ராவிற்கு மேற்கே நிரஞ்சனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பிச்ஹ்கிலியா நீர்வீழ்ச்சி இயற்கை ஆர்வலர்களால் விரும்பக்கூடிய இடம் மட்டுமல்ல, இது சாகசப் பிரியர்களையும் தன்னுள் ஈர்க்கின்றது. நீங்கள் மலை வரை ட்ரெக்கிங் செல்லலாம் அல்லது சீரற்ற தளத்தில் ஒரு இயற்கை நடை பயின்று வரலாம்.
குந்தா, சத்ராவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். குந்தா குகை கிராமத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. இங்கு குந்தா அரண்மனை இடிபாடுகள் மிகவும் பிரபலம். வரலாற்று ஆய்வுகள் இந்த அரண்மனை 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கின்றன. சத்ராவின் பிற முக்கியமான சுற்றுலாத் தலமாக கொல்ஹு ஹில் மற்றும் கௌலெஸ்ஹ்வரி கோயில் போன்றவை திகழ்கின்றன.