நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.
இந்த நாகராஜா கோயிலில் என்ன நடக்கிறது என்பது பற்றியறிய முழுவதும் படியுங்கள்!
இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்ட செய்திகள் கீழே....
கருவறையில் அதிசயம்
இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும்.
Pc: Infocaster
பிரசாதத்தில் வித்தியாசம்
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மண் வழங்கப்படுகிறது. இதுவும் வேறெங்கிலும் இல்லாத ஒரு மர்மத்தைக் கொண்டுள்ளது.
கருவறை மண்
அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது.
பாலமுருகன்
இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரன் பாடும் நடைபெறுகிறது.
திருமணம்
இக்கோயிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்பவர்களுக்கு நாக தோஷம் நீங்கி 6 மாதத்துக்குள் திருமணம் நடந்துவிடுகிறது. நாகராஜனின் சக்தி அப்படி.
எப்படி செல்லலாம்?
திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி முதலிய பகுதிகளிலிருந்து நாகர்கோயிலுக்கு பேருந்து வசதிகளும், ரயில் வசதிகளும் உள்ளன.
நன்றி
ரயில் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ வசதிகளும், நகர பேருந்து வசதிகளும் உள்ளன.
ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?
மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் இப்போ எப்டி இருக்கு தெரியுமா?
பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?
காரடையான் நோன்பு- இந்த கோயிலுக்கு போனா நீங்க தீர்க்கசுமங்கலியா வாழலாம்!
பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?
நிஜப் பேயை பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க