மிர்சாபூர் நகரின் கரையில் அமைந்துள்ள நர் மலைத்தொடர். நாராயன் எனும் தொட்டி அங்கிருந்ததாகவும், பின்னர் அதனை ஆற்று வெள்ளம் அடித்து சென்றதாகவும் கூறுவர். ஆகையால் இம்மலைத் தொடருக்கு நர் மலைத்தொடர் என்று பெயர்வந்ததாம். அதன்பிறகு, வேறு ஊர்களுக்கு அனுப்புவதற்காக சரக்குகளை சேமித்து வைக்கும் கிடங்காக நர் மலைத்தொடர் பயன்பட்டுவருகிறது. பல்லாண்டுக்கு முன்னரே வர்த்தகத்திற்காக நர் மலைத்தொடர் பயன்பட்டிருப்பதை தூண்களில் உள்ள கல்வெட்டுகளில் காண முடிகிறது.
தண்டா நீர்வீழ்ச்சி
மிர்சாபூரில் அமைந்திருக்கும் தண்டா நீர்வீழ்ச்சி அங்கிருக்கும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இயற்கையான நீர் ஓடைகள் மற்றும் உறுதியான அணைகள் நம் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, நம் மனதுக்கு அமைதியைத் தருகிறது. மிர்சாபூரில் இருந்து 14 கிமீ தெற்கே அமைந்துள்ள தண்டா அருவிக்கு செல்ல பேருந்து வசதிகள் உண்டு. மழைக் காலத்தில் சென்றால், அருவியையும் அதனைச் சுற்றியுள்ள இயற்கைய் அழகையும் வெகுவாக ரசிக்கலாம்.
ஒஜாலா மேலா
மிர்சாபூரில் நடைபெறும் பிரபலமான திருவிழா ஒஜாலா மேலா. ஒஜாலா என்னும் ஆறு அங்கு ஓடுவதால், இத்திருவிழாவிற்கு ஒஜாலா திருவிழா என்று பெயர்வந்தது. வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இத்திருவிழாவைப் பார்வையிட, உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் ஆர்வத்தோடு வருகின்றனர்.
சிருசி அணை
மிர்சாபூரில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சிருசி அணை அல்லது நீர்வீழ்ச்சி. தண்டா அருவியில் அருகில் உறுதியாக கட்டப்பட்டுள்ளது சிருசி அணை.
மிக உயரத்தில் இருந்து கொட்டும் இந்த அருவியின் அழகை ரசிக்க இருகண்கள் போதாது. அருவி மட்டுமல்லாது, அதனைச் சுற்றியிருக்கும் இயற்கை காட்சிகளும், விலங்கினங்களும் நம்மை நிச்சயமாகக் கவரும்.
லோகந்தி மேலா
மிர்சாபூரில் இருந்து 2 கிமீ தொலைவில் இருக்கிறது ஹனுமான் கோவில். இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா லோகந்தி மேலா என்பதாகும். கார்த்திகைப் பௌர்ணமி மற்றும் சாவான் இந்து மாதம் பிரதி சனிக்கிழமைகளில் இத்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் நினைவுப்பொருட்கள் போன்றவை கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகின்றது.