Search
  • Follow NativePlanet
Share
» »பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊர் இப்படியொரு அழகிய சுற்றுலாத் தலமா?

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊர் இப்படியொரு அழகிய சுற்றுலாத் தலமா?

இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த ஊரான குஜராத்தில் உள்ள வாட்நகர் மிகவும் தொன்மையான ஒரு அழகிய சுற்றுலாத்தலமாகும். இது விரைவில் உலக பாரம்பரிய சின்னத்தின் பட்டியலில் கூட இடம் பெறலாம், அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இங்கு குடியேறிய விவசாய சமூகங்கள் விட்டுச் சென்ற மண்பாண்டத் துண்டுகள், ஜவுளிகள், ஆபரணங்கள் மற்றும் கருவிகளில் 4500 ஆண்டுகால வரலாறு சிக்கியிருப்பதை நீங்கள் உணரலாம். இந்த அழகிய வரலாற்றுத் தலத்தில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி கட்டாயம் நாம் தெரிந்திருக்க வேண்டும்!

4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம்

4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம்

குஜராத் மாநிலத்தில் உள்ள இந்த புராதன நகர் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளைக் கொண்டுள்ளது. இந்த அழகிய இடத்தில் சிறந்த மட்பாண்டங்கள், ஆபரணங்கள், ஜவுளிகள், கருவிகள் மற்றும் துண்டுகள் இங்கு காணப்படுகின்றன, இங்கு ஷர்மிஸ்தா ஏரியைச் சுற்றி ஒரு அழகான தளம் உள்ளது. இது ஒரு அற்புதமான ஹரப்பான் தளம் என்று பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள்

செழுமையான வரலாற்றைக் கொண்ட இந்த நகரத்தில் ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் உள்ளன. கீர்த்தி தோரணம் முதல் ஸ்ரீ ஹட்கேஸ்வர் மஹாதேவ் பாரம்பரியம் வரை, வரலாற்று ஆர்வலர்களுக்கு வாட்நகரில் ஆராய்வதற்கு நிறைய இருக்கிறது.

அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட புத்த மடாலயங்கள், கோட்டைகள், பழங்கால கிணறுகள், ஸ்தூபிகள் மற்றும் கோயில்கள் ஆகியவை பல ஆண்டுகளாக நகரத்தின் கட்டிடக்கலை மற்றும் கலாச்சார தாக்கங்களின் ஒரு பார்வையை அளிக்கின்றன.

புராணங்களிலும், கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ள வாட்நகர்

புராணங்களிலும், கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ள வாட்நகர்

பல புராணங்களிலும், சிறந்த சீனப் பயணியான ஹியூ-என்-சாங்கின் 7ஆம் நூற்றாண்டை பயணக் குறிப்பிலும் கூட, வளமான மற்றும் செழிப்பான நகரமாக வாட்நகர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுன் பாரி வாயிலில் உள்ள கல்வெட்டு கி.பி 1152 இல் குமார்பால் மன்னன் நகரத்தை கோட்டைவிட்டதைக் காட்டுகிறது. சமத்கர்பூர், ஆனந்த்பூர், சினேபூர் மற்றும் விமல்பூர் ஆகியவை வரலாற்றில் வட்நகர் என்று கூறப்படும் வேறு சில பெயர்கள் ஆகும்.

கடந்த கால செழிப்பான வரலாறு

கடந்த கால செழிப்பான வரலாறு

வாட்நகர் பௌத்தம் மற்றும் ஜைன மதத்தையும் அதிகம் கண்டது. இருப்பினும் 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு பௌத்தம் மறைந்து விட்டது & சமணம் தொடர்ந்து செழித்து வருகிறது. இங்குள்ள மக்கள் சாயமிடுதல், ஜவுளி, காலிகோஸ் அச்சிடுதல், விவசாய கருவிகள், பாத்திரங்கள் செய்தல் மற்றும் கல் செதுக்கல்கள் ஆகியவற்றை தொழில்களாக கொண்டிருந்தனர். இங்குள்ள மக்கள் மிகவும் செல்வந்தர்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இசை கச்சேரி

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இசை கச்சேரி

நகரத்தின் தெற்கே உள்ள தானா மற்றும் ரிரி சமாதி, தானா மற்றும் ரிரி என்ற இரண்டு சகோதரிகளின் தைரியத்தை குறிக்கிறது. தான்சேன் என்ற இசைக்கலைஞர் தீபக் என்ற ராகத்தை பாடி அரசருக்கு காய்ச்சல் வரவைத்துவிட்டார். இதை தீர்க்க தானா மற்றும் ரிரி சகோதரிகள் பாட்டு பாடி மழையை வரவைத்து காய்ச்சலை குணப்படுத்தினார்.

இதைக் கேள்விப்பட்ட அக்பர், தன் அரசவையில் சிறுமிகள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவ்வாறு செய்வது அவர்களின் வளர்ப்புக்கு எதிரானது. இதனால் மனமுடைந்த அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களது நினைவாக நினைவிடம் கட்டப்பட்டது. மேலும் இந்த சகோதரிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு இசை விழா கொண்டாடப்படுகிறது.

பிரதமர் மோடி அவர்களின் சொந்த ஊர்

பிரதமர் மோடி அவர்களின் சொந்த ஊர்

இந்தியாவின் 14வது மற்றும் தற்போதைய பிரதம மந்திரி திரு. நரேந்திர சிங் மோடி அதே இடத்தில் பிறந்தார், இது உலகளவில் பிரபலமடைந்தது. நமது பிரதமரின் பூர்வீக ஸ்தலமான வாட்நகர், திரு. மோடியின் கடுமையான கண்காணிப்பில் உள்ளது மற்றும் போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இது நீங்கள் கட்டாயம் பார்வையிட வேண்டிய தொன்மையான நகரமாகும்!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+