இயற்கை அழகும், அமைதியும் நிறைந்த இந்த பைரோடன் தீவு கட்ச் வளைகுடாவின் மெரைன் நேஷனல் பார்க்கின் 42 தீவுகளில் ஒன்றாகும். இந்தியாவின் முதன் முதல் மெரைன் நேஷனல் பார்க் குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் 1982 இல் நிறுவப்பட்டது.
பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள், தனித்துவமான நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் அழகான பல்வேறு வகையான பறவைகளை இயற்கை வாழ்விடத்தைக் காண இந்த பூங்கா நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இந்த தூய்மையான மற்றும் தனித்துவமான பைரோடன் தீவைப் பற்றிய மேலும் பல தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்!

தனித்துவமான பைரோடன் தீவு
அனுமதிக்கப்படும் பைரோட்டான் தீவு, குஜராத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமாகும்.
கலங்கரை விளக்கத்தில் பணிபுரிபவர்களைத் தவிர தீவில் மக்கள் எவரும் வசிக்கவில்லை, எனவே தனிமையை அனுபவித்து, உங்களின் மனதிற்கும் உயிருக்கும் புத்துணர்ச்சி அளிக்க நீங்கள் கட்டாயம் இந்த பைரோடன் தீவிற்கு வருகைத் தரலாம்.
இந்த தனித்துவமான தேசிய பூங்கா உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்வதோடு, அரேபிய கடலின் உப்பு நீரின் கீழ் உள்ள கடல் வாழ் உயிரினங்களின் ஒரு கண்ணோட்டத்தையும் உங்களுக்கு வழங்குகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்ட மெரைன் நேஷனல் பார்க்கில் உள்ள இரண்டு தீவுகளில் இதுவும் ஒன்று, மற்றொன்று நாராரா தீவு. நாராரா தீவைக் காட்டிலும் இந்த தீவிற்கே மக்கள் அதிகம் வருகைத் தருகின்றனர்.

பைரோடன் தீவில் நாம் என்னவெல்லாம் காணலாம்?
பைரோடன் முதலில் 'பிர் ஜோ தான்' என்று அழைக்கப்பட்டது, இது புனித குவாஜா கிசர் ரஹ்மதுல்லாஹியாலையின் புனித இடத்தைக் குறிக்கிறது. துறவியின் புனித ஆலயமும் இந்தத் தீவில் அமைந்துள்ளது. மேலும், அழகிய பறவைகளான பெலிகன், ஹெர்ரிங் குல், கடல் காளை, கரும்புள்ளி போன்ற பல்வேறு வகையான பறவைகளையும் நாம் இங்கே காணலாம்.இயற்கை மற்றும் சாகசத்தை விரும்பும் மக்களுக்கு பைரோடன் தீவு ஒரு ரத்தினமாகும், ஏனெனில் வண்ணமயமான பவளப்பாறைகளும் சதுப்புநிலங்களும் நிறைந்த இந்ததீவில் ஜெல்லி மீன், ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் பாம்புகள், ஹெர்மிட் நண்டுகள், கடல் குதிரை, நத்தைகள், பச்சை கடல் ஆமைகள் மற்றும் டால்பின்கள் போன்ற அழகான நீர்வாழ் உயிரினங்களை நாம் இங்கே கண்டு களிக்கலாம்.

பைரோடன் தீவை எப்படி அடைவது?
ஜாம்நகர் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. ஜாம்நகர் ரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் ஜாம்நகர் இடையே சௌராஷ்டிரா மெயில் மற்றும் சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் அடிக்கடி இயக்கப்படுகின்றன.
மேலும், ஜாம்நகர் குஜராத்தின் மற்ற நகரங்களுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட், சூரத், ஜுனகர், அகமதாபாத், போர்பந்தர் மற்றும் புஜ் இடையேயும் பிற மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பைரோடன் தீவுக்கு வழக்கமான படகு சேவை இல்லை. பேடி துறைமுகம் அல்லது ரோசி துறைமுகத்திலிருந்து நீங்கள் படகுகளை வாடகைக்கு எடுக்க வேண்டும். கடற்கரை மிகவும் ஆழமற்றதாக இருப்பதால், படகுகள் அதிக அலைகளின் போது மட்டுமே தீவை அடைய முடியும் மற்றும் அதிக அலைகளின் போது தீவை விட்டு வெளியேற முடியும். நிலவின் நிலை மாற்றத்துடன் அலைகளின் நேரங்கள் மாறும் என்பதால் உள்ளூர் மக்களிடம் விசாரிக்க வேண்டும். தீவை அடைய 1.5 முதல் 2 மணி நேரம் ஆகும்.

தீவைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
பைரோடனுக்கு வருவதற்கு முன், வனத்துறை, சுங்கத்துறை மற்றும் துறைமுகங்களின் அனுமதியைப் பெற வேண்டிய கடுமையான அதிகாரப்பூர்வ நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டவர் என்றால், காவல் துறையின் கூடுதல் அனுமதி தேவை.
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் அமைதியான காலநிலை காரணமாக விரும்பப்பட்டாலும், ஆண்டின் எந்த நேரத்திலும் நீங்கள் பைரோடன் தீவுக்குச் செல்லலாம்.
தீவில் தங்குவதற்கு இடம் இல்லை, உணவு இல்லை, தண்ணீர் இல்லை. அதிக அலைகள் பொதுவாக 12 மணிநேர சுழற்சியைக் கொண்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் 10-12 மணி நேரம் பைரோடானில் தங்க வேண்டியிருக்கும் என்பதால், நீங்கள்சொந்த உணவு மற்றும் தண்ணீரைக் கொண்டு வர வேண்டும்.



Click it and Unblock the Notifications






