Search
  • Follow NativePlanet
Share
» »ராணி எலிசபெத் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த இடங்களுக்கு தான் சென்றாராம்!

ராணி எலிசபெத் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த இடங்களுக்கு தான் சென்றாராம்!

ராணி இரண்டாம் எலிசபெத் அவரது ஆட்சிக் காலத்தில் மூன்று முறை இந்தியா வந்துள்ளார். ஆம்! 1952 இல் அரியணையில் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக ராணியான பிறகு ராணி இரண்டாம் எலிசபெத் மூன்று முறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தின் ராணியாக மிக நீண்ட காலம், ஏறக்குறைய 70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த பின்னர் செப்டம்பர் 8 ஆம் தேதி தனது 96 வயதில் காலமானார். ராணி தனது ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த போது எங்கெல்லாம் சென்றார் என்பதை தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்!

1961 ஆம் ஆண்டில் முதல் வருகை

1961 ஆம் ஆண்டில் முதல் வருகை

1961ஆம் ஆண்டு இளவரசர் பிலிப்புடன் ராணி எலிசபெத் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தார். அரச தம்பதிகள் நாட்டில் உள்ள சில புகழ்பெற்ற வரலாற்று தளங்களை ஆய்வு செய்தனர். அவர்கள் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் புதுதில்லியில் உள்ள ராஜ்காட் ஆகிய இடங்களுக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அவர்கள் சென்னை (அப்போதைய மெட்ராஸ்), மும்பை (அப்போதைய பம்பாய்), கொல்கத்தா (அப்போதைய கல்கத்தா), வாரணாசி (அப்போதைய பெனாரஸ்), உதய்பூர், ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு (அப்போதைய பெங்களூர்) போன்ற பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தனர்.

பயணத்தின் போது, ராஜ்பாத்தில் நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜெய்ப்பூர் மகாராஜா அவர்களை வேட்டையாடி விருந்தளித்தார்.

1983 இல் இரண்டாவது வருகை

1983 இல் இரண்டாவது வருகை

ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்பின் அடுத்த அரச வருகை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனாதிபதி கியானி ஜைல் சிங்கின் அழைப்பின் பேரில் நடந்தது. மேலும் அவர்கள் ராஷ்டிரபதி பவனின் பார்வையாளர்களின் தொகுப்பில் தங்கினர். பிபிசியால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு செய்தித்தாளின்படி, வருகைக்காக இந்திய அலங்காரங்கள் வைஸ்ரீகல் அலங்காரத்துடன் மாற்றப்பட்டன, மேலும் ராணி "எளிய உணவுகளை" விரும்புவதாகக் கூறப்பட்டதால், அவருக்காக பழைய மேற்கத்திய பாணி உணவுகள் தயாரிக்கப்பட்டன.

தனது 9 நாள் அரசுமுறைப் பயணத்தின் போது அன்னை தெரசாவுக்கு கௌரவ ஆணை வழங்கினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவர் அதை வழங்கினார். எலிசபெத் மகாராணியும் பாரத பிரதமர் இந்திரா காந்தியயும் புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துக் கொண்டனர்.

1997 இல் மூன்றாவது வருகை

1997 இல் மூன்றாவது வருகை

காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் அரச தம்பதிகள் கடைசியாக 1997 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பயணம் செய்தனர். ராணி தனது மூன்றாவது வருகையின் போது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கும் ஜாலியன்வாலாபாக் நினைவிடத்திற்கும் சென்றார். மேலும், அவர் இந்த முறை ஒரு இந்திய படத்தொகுப்பிலும் கலந்து கொண்டார். ஆம், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்த மருதநாயகம் படப்பிடிப்புக்கு சென்றார். சென்னையின் எம்ஜிஆர் திரைப்பட நகருக்குச் சென்று சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்தார்.

இவைகள் தான் ராணியால் பார்வையிடப்பட்ட இடங்களாகும். நீங்களும் இங்கு சென்று ராணி எலிசெபெத் பார்வையிட்ட இடங்களைக் கண்டு மகிழலாம்!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+