என்னது? தமிழ் நாட்டுக்குள் ஏது பாலைவனம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையில், சிகப்பு மணலால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறு பாலைவனம் உள்ளது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. ஆம்! இந்த பாலைவனத்தை நாம் அசுரன், தாமிரபரணி, வில்லு போன்ற பிரபல தமிழ் திரைப்படங்களில் பார்த்து இருக்கிறோம்! இந்த பாலைவனம் எங்கே இருக்கிறது? எப்போது செல்லலாம் என்று இங்கே பார்ப்போம்!

தமிழ்நாட்டுக்குள் ஒரு குட்டி பாலைவனம்
இந்தியாவில் பாலைவனங்களைப் பற்றி விவாதிக்கும்போது தார் மட்டுமே நினைவுக்கு வருகிறது. தார் அல்லது கிரேட் இந்திய பாலைவனம் ஓரளவு ராஜஸ்தானிலும், ஓரளவு பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களிலும் அமைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலும் ஒரு சிறு செந்நிற பாலைவனம் உள்ளது என்கிறார்கள் தெரியுமா? ஆம்! தமிழ்நாட்டில் காணப்படும் 'தேரிக்காடு' என்ற சிறிய பாலைவனம் நம்மில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிவப்பு மணல் திட்டுகளால் ஆன இந்த பாலைவனம் திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தை நீங்கள் பல தமிழ் திரைப்படங்களில் கண்டு இருப்பீர்கள்!
தேரிக்காடு எனும் சிவப்பு பாலைவனம்
சிவப்பு மணல் திட்டுகளை தமிழில் தேரி என்று அழைக்கிறார்கள். அவை நான்காம் காலத்தைச் சேர்ந்த வண்டல்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் கடல் வைப்புகளால் ஆனவை. அவை மிகக் குறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து தக்கவைப்பு திறனைக் கொண்டுள்ளன. மணல் திட்டுக்கள் காற்றியக்கவியல் லிப்ட்டுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன. இது எதையாவது மேலே நகர்த்த அனுமதிக்கும் உந்துதல். இது எடைக்கு எதிரான சக்தியாகும்.

தேரிக்காடு எங்கே உள்ளது?
தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரவி இருக்கிறது இந்த தேரிக்காடு. நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, காயாமொழி, பரமன்குறிச்சி ஆகிய ஊர்கள்களுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த தேரிக்காடு சிவப்பு மணல் குன்றுகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை என்று கூறப்படுகிறது. தேரிக்காடு சாகுபடி சாத்தியமில்லை என்றாலும், பனை மரங்கள், முந்திரி மரங்கள் பரவலாக உள்ளன.
தேரிக்காடு உருவானது எப்படி?
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் பின்னடைவைத் தொடர்ந்து கடற்கரை மணலின் உள்ளூர் வரம்பினால் இந்த தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கே வீசும் பலத்த காற்றின் விளைவாக மணல் தானியங்கள் நகர்ந்து குன்றுகள் குவிந்தன. தென்மேற்குப் பருவக்காற்றுகள், மகேந்திரகிரி மலைக்குப் பின்னால் உள்ள ஈரப்பதத்தையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆரல்வாய்மொழி இடைவெளியும் வடிந்த பிறகு சுமார் 12,000 ஏக்கர் அல்லது 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேரிக்காடு உருவானதாம்.

எதனால் இது சிவப்பு பாலைவனம்
இந்தப் பகுதி அதன் அசாதாரண சிவப்பு மணல் திட்டுகளுக்கு பெயர் பெற்றது, இது தமிழ்நாட்டின் வழக்கமான பச்சை மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுடன் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டை உருவாக்குகிறது. வறண்ட நிலப்பரப்புடன் இணைந்து, சிவப்பு மணல் இதற்கு பாலைவனம் போன்ற தோற்றத்தை அளிக்கிறது, எனவே இது "சிவப்பு மணல் பாலைவனம்" என்று அழைக்கப்படுகிறது.
உள்ளே சென்றால் திரும்ப முடியாதாம்
நீங்கள் தேரிக்காடு உள்ளே போய் எங்கு நின்றாலும் ஒரே இடம் போல தோன்றும், அதுவும் குறிப்பாக ஆடி மாதம் அல்லது நன்கு காற்று வீசும் நேரத்தில் நீங்கள் இங்கு சென்றால் நிச்சயம் நீங்கள் வந்த பாதையை மறந்து விடுவீர்கள். அதே போல மழை பொழியும் நேரத்தில் இங்கு வருவது மிக மிக ஆபத்து என்கிறார்கள் உள்ளூர் மக்கள். மழை நேரத்தில் இந்த இடம் முழுக்க ஈரப்பதம் அடைந்து கடுமையான புதைகுழி போன்ற அமைப்பை உருவாக்குவதாகவும், தனியாக சிக்கிக் கொண்டால் ஆபத்து என்றும் கூறுகின்றனர். கூடவே இங்கு சுருட்டை விரியன், கட்டு விரியன் போன்ற விஷ பாம்புகளும் காணப்படுகிறதாம்.
தமிழ் திரைப்படங்களில் தேரிக்காடு
இது தான் தமிழ்நாட்டின் பாலைவனம் என்று அறியாமல் நீங்கள் பலமுறை இந்த இடத்தை தமிழ் திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள். ஐயா படத்தில் ஒரு வார்த்தை கேக்க ஒரு வருஷம் என்ற பாடல், அசுரன் படத்தில் இடைவேளை நடுவே வரும் பிரபல சண்டை காட்சி, தாமிரபரணி படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த தேரிக்காடு பகுதியில் தான் படமாக்கப்பட்டன.
எதனால் இங்கு செல்ல வேண்டும்
பரந்து விரிந்த சிவப்பு மணல் மேடுகள், அரிதான தாவரங்களுடன் இணைந்து, புகைப்படம் எடுத்தல் மற்றும் இயற்கை நடைப்பயணங்களுக்கு ஏற்ற ஒரு அழகிய காட்சியை வழங்குகின்றன. சிவப்பு மணலுக்கும் நீல வானத்திற்கும் இடையிலான வேறுபாடு இயற்கை புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடமாக அமைகிறது. பிரதான சுற்றுலா தலங்களைப் போலல்லாமல், தேரி காடு ஒப்பீட்டளவில் குறைவான கூட்ட நெரிசல் கொண்டது, அமைதியான மற்றும் அமைதியான சூழலை வழங்குகிறது. நீங்களும் உங்கள் நண்பர்களுடன் இந்த இடத்திற்கு சென்று சில போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுங்களேன்!



Click it and Unblock the Notifications



