இரண்டு தலைமுறைகளுக்கு அன்னை மடியாய், காதலியின் செவ்விதழாய், தந்தையின் அரவணைப்பாய், நண்பனின் தோளாய் என எல்லாமுமாக இருந்த ஒன்று என்றால் அது இளையராஜாவின் பாடல்கள் தான். இவரின் இசைமொழி கேட்டு உருகாத நெஞ்சமே இருக்க முடியாது எனலாம். அப்படி நம் எல்லோர் வாழ்க்கையிலும் இரண்டற கலந்துவிட்ட 'ராக தேவன்' இளையராஜாவின் 73ஆவது பிறந்த நாள் இன்று.
தன்னுள் பிரவாகமெடுக்கும் இசையெல்லாம் தாய் கொல்லூர் மூகாம்பிகையின் அருளே என்று சொல்லும் அளவுக்கு மூகாம்பிகை அம்மனின் பக்தர் அவர். அந்த அம்மனை போற்றி அவர் இசையமைத்து பாடிய "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" கேட்போர் நெஞ்சங்களில் எல்லாம் அம்மனை குடிகொள்ளச்செய்யும். அப்பேர்ப்பட்ட பேரருள் பொருந்திய கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
{photo-feature}
Other articles published on Jun 2, 2016



Click it and Unblock the Notifications





