முத்து நகரம், தமிழ்நாட்டின் உப்புத் தலைநகரம் மற்றும் தமிழ்நாட்டின் கடல் நுழைவாயில் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் தூத்துக்குடி, தமிழ்நாட்டின் மிக அழகான நகரங்களில் ஒன்றாக அழகிய கடற்கரைகள், இயற்கை காட்சிகள், பரந்த நிலப்பரப்புகள், அழகான கோவில்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு சில நாட்கள் செலவிடுவது உலகத்திலிருந்து உங்களைத் துண்டிப்பது மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
அங்கு செல்லும் போது தூத்துக்குடி பிரபலமான மக்கானாவையும், மஸ்கோத் அல்வாவையும் சுவைக்க மறக்காதீர்கள்.
நீங்கள் தூத்துக்குடி செல்லும்போது இந்த இடங்களை எல்லாம் பார்க்க மறக்காதீர்கள்! இதோ உங்களுக்கான தூத்துக்குடி டூர் கைடு!
திருச்செந்தூர் முருகன் கோவில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் ஒன்றான பிரபலமான திருச்செந்தூர் முருகன் கோவில் தூத்துக்குடியில் தான் அமைந்துள்ளது. மற்ற ஐந்து படைவீடுகளும் மலை மீது இருக்கின்றன, தரையில் அமைந்திருக்கும் ஒரே படை வீடு திருச்செந்தூர் மட்டுமே. சூரபத்மனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் 'ஜெயந்திநாதர்' என்று விளிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி 'செந்தில்நாதர்' என்று மருவியதாக கூறப்படுகிறது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் இங்கு வந்து வேண்டினால் அனைத்துக் காரியங்களையும் நடக்கிறது என்றும் வந்து செல்லும் பக்தர்கள் கூறுகிறார்கள். ஆகவே முதலில் நீங்கள் இங்கு தான் செல்ல வேண்டும். இந்தக் கோயில் கடலுக்கு அருகில் அமைந்திருப்பது மேலும் ஈர்க்கும் அம்சமாகும்.
கழுகுமலை
தூத்துக்குடியில் பார்க்க வேண்டிய மிக அழகான இடங்களில் ஒன்றாகும். கழுகுமலை அதன் பழமையான பாறை வெட்டப்பட்ட கோயில்கள் மற்றும் ஒற்றைக்கல் ஜெயின் படுக்கைகளுக்கு பிரபலமானது. மலை மேலே நின்று வேடிக்கை பார்ப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். பண்டைய காலங்களில் வணிகப்பாதையாக செயல்பட்ட இந்த பழங்கால நகரின் அழகை நீங்கள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டும்.
களக்காடு வனவிலங்கு சரணாலயம்
தென்னிந்தியாவில் புலிகள் வசிக்கும் சில தேசிய பூங்காக்களில் களக்காடு வனவிலங்கு சரணாலயமும் ஒன்றாகும். தூத்துக்குடியில் பார்க்க வேண்டிய மிகவும் பிரபலமான இடங்களில் பிரதானமான ஒன்று. இங்கு நீங்கள் புலிகள், சிங்கவால் மக்காக், நீலகிரி லாங்கூர், பொன்னெட் மக்காக், லாங்கூர், நீலகிரி தஹர், சாம்பார், சோம்பல் கரடி, கவுர், யானை, பறக்கும் அணில், சிறுத்தை, காட்டு நாய் மற்றும் பாங்கோலின் ஆகியவற்றையும் பார்க்கலாம். இந்த வனவிலங்கு சரணாலயம் சஃபாரிக்கும் பிரபலமானது மற்றும் அருகிலுள்ள பகுதி மலையேற்றத்திற்கும் பிரபலமானது. எனவே நீங்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ணக் கூடாது.
தூத்துக்குடி துறைமுகம்
இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகம் ஆண்டு முழுவதும் ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. அழகிய காட்சிகளை ரசித்துக் கொண்டே அமைதியின் மத்தியில் ஓய்வெடுக்கும் தூத்துக்குடியில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களைத் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கான சரியான இடம். V. O. சிதம்பரம் துறைமுக அறக்கட்டளை என்று புகழ் பெற்ற தூத்துக்குடி துறைமுகம் 1974 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த துறைமுகமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டபொம்மன் நினைவுக் கோட்டை
கட்டபொம்மன் நினைவுக் கோட்டை தூத்துக்குடி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும், இது தூத்துக்குடி உள்ளூர் மக்களிடையே ஒரு புனித தலமாக கருதப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்ம கருத்தய்யா நாயக்கரின் நினைவாக இந்த நினைவுக் கோட்டை தமிழக அரசால் கட்டப்பட்டது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட இடத்திலேயே நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் அழகாக உருவாக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது.
எட்டயபுரம் அரண்மனை
இப்பகுதியில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், இந்த எட்டயபுரம் அரண்மனை அவற்றில் மிகவும் பிரபலமானது. இந்த அரண்மனை தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அரண்மனையின் அழகு அப்படியே உள்ளதையும் அதன் கட்டிடக்கலை மகிமையையும் நாம் காணலாம். இந்த இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இங்கு எந்த ஆட்சியாளர் வாழ்ந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இந்த அரண்மனை உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
பனிமலை அன்னை பசிலிக்கா
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றாக, கட்டிடக்கலையால் நம்மை பிரமிக்க வைக்கும் இந்த பனிமலை அன்னை பசிலிக்கா தூத்துகுடியில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாகவும், பார்க்க வேண்டிய சிறந்த தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. புனித மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் ரோமில் உள்ள பசிலிக்கா டி சாண்டா மரியா மாகியோரிலிருந்து ஈர்க்கப்பட்டது.
மணப்பாடு
எந்தவொரு மாசும் தீண்டிடாத அழகுடன் நம்மை வரவேற்கிறது இந்த மணப்பாடு. மணப்பாடு தூத்துக்குடியில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த நகரம் தெளிவான நீல கடல்களுக்கும் இயற்கையாக உருவான குன்றுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. வரலாற்றில் பதிந்து, இயற்கை அழகு மற்றும் நிலப்பரப்புகளால் பரிசளிக்கப்பட்ட மணப்பாடு, ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கும் பிரபலமான இடமாகும்.
ஸ்ரீ வைகுண்டம் கோயில்
பகவான் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த அழகான கோயில், நிச்சயம் தூத்துக்குடியில் தவறவிடக்கூடாத இடங்களில் ஒன்றாகும். இக்கோவில் இந்தியாவில் உள்ள ஒன்பது புனித விஷ்ணு கோவில்களில் ஒன்றாகும். மேலும், தூத்துக்குடியில் அதிகம் பார்வையிடப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஒட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் என்பது தூத்துக்குடியின் உள்பகுதியில் உள்ள ஒரு சிறிய பகுதி. இது பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்று சுதந்திரப் போராட்ட வீரர் V.O சிதம்பரத்தின் வீடு. இங்கு பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் உலகம்மன் கோயில். இந்த இரண்டையும் மிஸ் பண்ணி விடாதீர்கள்.
எப்படி செல்வது?
தூத்துக்குடி கிழக்கு மற்றும் தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவாலும், வடக்கே விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களாலும், மேற்கு மற்றும் தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. ஆகையால் பேருந்து மூலம் தூத்துக்குடியை அணுகுவது மிகவும் எளிது.
மேலும், தூத்துக்குடி விமான நிலையம் நகரின் மையப்பகுதியில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையம் தென்னக ரயில்வேயின் கீழ் மாநிலத்திற்கு உள்ளேயும், வெளி மாநிலங்களுக்கும் ரயில்களை இயக்குகின்றன.