Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஒரு செயலி போதும் – ரயிலில் எந்த தொந்தரவும் இல்லாமல் பயணம் செய்ய!

இந்த ஒரு செயலி போதும் – ரயிலில் எந்த தொந்தரவும் இல்லாமல் பயணம் செய்ய!

இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறந்த உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில், பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யவும், அவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்தவும் செயலி ஒன்றை நிர்வகித்து வருகிறது. இந்த ஒற்றை செயலி உங்கள் போனில் இருந்தால் போதும், நீங்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா மக்களே!

Vande Bharat

இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ செயலி

பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வில் ரயில் பயணம் ஒரு அன்றாட அங்கமாகவே மாறிவிட்டது. கல்வி கற்க, வேலைக்கு செல்ல, வீட்டிற்கு செல்ல, சுற்றுலாச் செல்ல என நாள்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கிறார்கள். ஆனால் நாள்தோறும் அவர்கள் சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதெற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவது போல தான், இந்திய ரயில்வே ஒரு செயலியை நிர்வகித்து வருகிறது. அந்த செயலில் புகர் செய்தால் போதும்! உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்! அந்த செயலி மூலம் என்னென்ன பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்? எப்படி அந்த செயலி பயன்படுத்துவது என்று இங்கே காண்போம்!

பயணிகள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள்

நாம் பெரும்பாலான நேரங்களில் ரயில் பயணங்களைப் பற்றி பெருமையாக பேசினாலும், சில நேரங்களில் கசப்பான அனுபவங்களையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. திருட்டு, கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களும், கோச்களில் தண்ணீர் இல்லாமல் போவது, டாய்லெட் சுத்தமாக இல்லாமல் இருப்பது என பல பிரச்சனைகளை பயணிகள் அன்றாடம் சந்தித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rail MADAD செயலி

ஓடும் ரயிலில் பிரச்சினை சந்திக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டுமென்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. அதனாலேயே பெரும்பாலான பிரச்சினைகளை நாம் அப்படியே விட்டுவிடுகிறோம். ஆனால் இனி அப்படி விட வேண்டாம். ஓடும் ரயிலில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் Rail MADAD (Mobile Application for Desired Assistance During travel) என்ற செயலியை டவுன்லோட் செய்து அந்த செயலியில் புகார் அளித்துவிட்டால் போதும். சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனே புகார் சென்றுவிடும்.

பயணிகளுக்கு உதவி செய்வதே பிரதான நோக்கம்

ரயில் மாடத் என்பது (Rail Madad) பயணிகளுக்கு சிறந்த உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்திய ரயில்வேயின் ஒரு முயற்சியாகும். இது ஒரு ஆன்லைன் தளமாகும், இதன் மூலம் பயணிகள் புகார்களைப் பதிவு செய்யலாம், உதவி கோரலாம் மற்றும் ரயில் சேவைகள் தொடர்பான தங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெறலாம். இந்திய இரயில்வேக்கும் பயணிகளுக்கும் இடையிலான உறவை இந்த தளம் மேம்படுத்துகிறது. இது சிறந்த வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நம்பிக்கையை வளர்க்கிறது.

எதற்கும் இனி கவலை வேண்டாம்

இந்த அமைப்பு பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் பயணிகள் புகார்களைத் தெரிவிக்கவும், அவர்களின் பிரச்சினைகளின் நிலையைக் கண்காணிக்கவும், ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவும் வசதியாக உள்ளது. பயணத்தின் போது அவசரநிலைகள் அல்லது பாதுகாப்புக் கவலைகள் ஏற்பட்டால், ரயில்வே பாதுகாப்பு மற்றும் நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொள்வது உட்பட, பயணிகளுக்குத் தேவையான உதவிகளைப் பெற ரயில் மடத் உதவுகிறது.

எவற்றிற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்

1. ரயில் தாமதம், மோசமான வசதிகள், தூய்மை மற்றும் சேவை தொடர்பான பிற பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் குறித்து பயணிகள் புகார் அளிக்கலாம்.

2. ரயில் தாமதங்கள், சாமான்களை இழத்தல் அல்லது அவசரகாலச் சூழ்நிலைகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டால், அவர்களின் பயணத்தின் போது, ரயில் மடாட் பயணிகளுக்கு நிகழ்நேர ஆதரவை வழங்குகிறது.

3. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், பயணிகள் தங்கள் புகாரின் நிலையைக் கண்காணிக்கலாம் மற்றும் அதன் தீர்வு குறித்த புதுப்பிப்புகளைப் பார்க்கலாம். இது பதில் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்கிறது.

4. இரயில் மடாட் சேவை 24 மணி நேரமும் கிடைக்கிறது, இது பயணிகளுக்கு ஆதரவுக்கான தொடர்ச்சியான அணுகலை வழங்குகிறது.

5. பயணிகள் தங்கள் புகார்களுக்கு விரைவான பதில்களையும் தீர்வுகளையும் பெறலாம். இது ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது, குறிப்பாக அவசர காலங்களில்.

6. ரயில் மாடத் செயலி மூலம் இரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். Menu on Rails செயலி மூலம் ரயிலில் கிடைக்கும் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானம் போன்றவற்றின் விலையை சரிபார்க்கலாம்.

7. ரயிலில் பயணிக்கும் பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ திடீரென அவரது உடல்நிலை யாரும் எதிர்பாராத வகையில் சிரியஸ் ஆகிவிட்டாலோ உடனடியாக இதில் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் அடுத்த ரயில்நிலையத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி,ஆம்புலன்ஸ் உதவி உள்ளிட்டவைற்றையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Rail Madad ஐ எவ்வாறு பயன்படுத்துவது

1. மொபைல் ஆப் மூலம்: ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு சாதனங்களிலும் கிடைக்கும் ரெயில் மடாட் மொபைல் செயலியை பயணிகள் பதிவிறக்கம் செய்யலாம்.

2. இணையதளம் வழியாக: புகார்கள் அல்லது கோரிக்கைகளைப் பதிவு செய்ய பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

3. சமூக ஊடகங்கள்: ட்விட்டர் போன்ற தளங்கள் வழியாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம், அங்கு இந்திய ரயில்வே பொதுக் குறைகளைக் கையாளுகிறது.

சாதாரண போனிலும் புகார் செய்யலாம்

ஆன்லைன் ஆப் அல்லது வெப்சைட் பயன்படுத்த முடியாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் தங்கள் செல்போனில் 139 என்ற ரயில்வே . உதவி எண்ணிற்கு போன் செய்தும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதற்கு ஸ்மார்ட் போன்கள் தான் இருக்க வேண்டும் என்று இல்லை சாதாரண செல்போனிலிருந்தும் கூட புகாரளிக்கலாம்.

இன்று இந்த ஆப் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக தான் இருக்கிறது. இனி இந்த செயலியைப் பயன்படுத்தி நீங்கள் தொந்தரவின்றி ரயில் பயணம் செய்யலாம். இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!

More News

Read more about: indian railways irctc
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+