Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஹில் ஸ்டேஷன்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை என உங்களுக்கு தெரியுமா?

இந்த ஹில் ஸ்டேஷன்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை என உங்களுக்கு தெரியுமா?

பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க, கோடைகால ஓய்வு இடங்களாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட மலைவாசஸ்தலங்கள் பல உள்ளன. அவற்றில் இந்தியாவில் மிகப் பழமையான 10 மலைவாசஸ்தலங்களை இங்கே எதுவென்று பார்க்கலாம்.

Darjeeling

சிம்லா

பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைகால தலைநகரம் என்று சிம்லா அழைக்கப்படுகிறது. காலனித்துவ காலத்தைச் சேர்ந்த கட்டிட கலைகளில் அமைந்த பல கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் சிம்லாவில் உள்ளன. சிம்லா நகரத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான ஸ்ரீ ஹனுமான் ஜக்கு கோயில், கிறிஸ்து தேவாலயம், ஆல் சாலை தி ரிச் மற்றும் அன்னை டெலாகியவே ஆகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கல்கா சிம்லா ரயில் பாதையும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

டார்ஜிலிங்

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது பிரிட்டிஷ் அதிகாரிகளால் டார்ஜிலிங் உருவாக்கப்பட்டது. அவர்களது குடும்பங்களுக்கு கோடைகால ஓய்வு இடமாக நிறுவப்பட்டது. இங்கு அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. டார்ஜிலிங் இமயமலை ரயில்வே யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முசோரி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்தமான ஓய்வு இடமாக இருந்தது. இந்த மலை வாசஸ்தலம் கர்வால் இமயமலை தொடரின் அடிவாரத்தில் உள்ளது. முசோரி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும் உள்ளது. இங்கு அமைந்துள்ள கேமல்ஸ் பேக் ரோடு, தனால்டி லால் டிப்பா போன்ற பல இடங்கள் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளன.

Nainital

நைனிடால் ஏரி:

இந்த ஏரியா இனிமையான காலநிலை மற்றும் அதன் ஏரியின் அழகிற்காக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. இந்த நைனிடால் ஏரி, நைனிடாலில் உள்ள நான்கு முக்கியமான ஏரிகளில் ஒன்றாகும். மற்ற மூன்று ஏரிகள் சத்தால் ஏரி, பீம்த்தால் ஏரி மற்றும் நவ் குல்த்தால் ஏரி ஆகும். இது உத்தரகண்ட் பரப்பளவில் மூன்றாவது பெரிய ஏரியாகும். இதில் உள்ள படகு சவாரி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ளது.

கொடைக்கானல்

மிஷினரிகளுக்கான சுகாதார மையமாக நிறுவப்பட்ட இது, அமைதியான ஓய்வு இடமாக தொடர்ந்து உள்ளது. கோக்கர்ஸ்வாக் கோடை ஏரி மற்றும் பில்லர் பாறைகளை கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கொடைக்கானல் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட முதல் மலைவாசஸ்தலம் ஊட்டி ஆகும். தேயிலை தோட்டங்கள் மற்றும் நீராவி மலை ரயிலுக்கு பெயர் பெற்ற இடமாகும். இந்த மலை ரயிலில் பயணிக்கு அனுபவமே மிக சுவாரஸ்யமானதாகும்.

மாத்தோரான்

இந்தியாவில் மிகச் சிறிய மற்றும் வாகன போக்குவரத்து இல்லாத ஒரே மலைவாசஸ்தலம் மாத்தோரான். மாத்தோரான் பாயிண்ட்ஸ் சாரலோட் ஏரி நீராவி ரயில் ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.

மவுண்ட் அபு ராஜஸ்தான்

ராஜஸ்தானில் உள்ள ஒரே மலை வாசஸ்தலம் மவுண்ட் அபு. இது பிரிட்டிஷ் பாசறையாக பயன்படுத்தப்பட்டது. இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக நக்கி ஏரி, தில்வாரா கோயில்கள் மற்றும் குரு சிகராக் ஆகியவை அமைந்துள்ளன.

More News

Read more about: hill stations
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+