நாதா செக்டின், ஷைவிட்டே தலைவரான மட்ஸ்யேந்த்ரநாத் என்பவரின் பெயரால் பிர் மட்ஸ்யேந்த்ரநாத் என்ற ஆசிரமம் நிறுவப்பட்டது. இதன் தலைவரை பிர் என்று தான் அவரின் சிஷ்யர்கள் அழைத்தனர்.
இது ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களால் மதிக்கப்படுகிற இடம். இந்த இடம் ஷிப்ரா நதிக்கரையில், பர்த்ரிஹரி குகைகள் மற்றும் கட்கலிகா கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
உஜ்ஜைன் நகரத்தில் இருந்து இது 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் இங்கு வருவது மிகவும் சுலபம். தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த இடம் தோண்டப்பட்ட போது பல பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த பொருட்கள் கி.மு. 6 மற்றும் 7-ஆம் நூற்றாண்டில் பயன்பட்டதாகும். இந்த இடத்தின் கட்டிட அமைப்பை போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.
ஒரு எளிய வெள்ளை கட்டிடமாக காட்சி அளித்தாலும் அதன் வடிவமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதன் வடிவமைப்பின் தரத்தை ஆராய்வதற்கு அதன் நுட்பகங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தினமும் பல பக்தர்கள் இங்கு வருவார்கள்.



Click it and Unblock the Notifications