குரிசுமலா ஆஷ்ரமத்திற்கு செல்லும் வழியில் குரிசுமலா மலையிலேயே இந்த பால் பண்ணைகள் அமைந்துள்ளன. இவை குரிசுமலா ஆஷ்ரமத்திலுள்ள குருமார்களாலேயே நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தோ-ஸ்விஸ் கூட்டு முயற்சித்திட்டத்தின் கீழ் இந்த பால்பண்ணைகள் நிர்வகிக்கப்படுகின்றன. குரிசுமலா ஆஷ்ரமத்தில் வசிக்கும் குருமார்களுக்கான வாழ்வாதாரமாக இந்த பண்ணைகள் முதலில் துவங்கப்பட்டிருக்கின்றன.
ஜெர்சி எனும் தீவிலிருந்து பசுமாடுகளும் பிரத்தியேகமாக இந்த பண்ணைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வாகமண் மலைவாசஸ்தலத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது இந்த பால்பண்ணைக்கும் மறக்காமல் விஜயம் செய்வது நல்லது.
இயற்கைக்கு வெகு அருகில் இழுத்துச்செல்லும் இந்த பால்பண்ணையின் ரம்மியமான சூழல் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. அமைதியான நாட்டுப்புற எழில், பசுமையான மலைகளின் கம்பீர தோற்றங்கள், பரபரப்பில்லாத வாழ்க்கை முறை போன்றவற்றை இந்த பால்பண்ணை வளாகத்தில் பயணிகள் அனுபவித்து உணரலாம்.



Click it and Unblock the Notifications