ஒரு ஏரியிலிருந்து ஒரு சிறு நீரோடை இந்த வாகமண் நீர்வீழ்ச்சியாகும். ஒரு பாறைப்பிளவின் ஊடாக இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் பின்னணியில் பசுமையான பாறைத்திட்டுகளும் அடர்ந்த காடுகளும் வீற்றுள்ளன.
இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மலையேறிகள் மத்தியில் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி ரசிக்கப்படுவதற்கான காரணம் இதன் பிரம்மாண்டமோ அல்லது உயரமோ இல்லை.
மாறாக இது உருவாகும் ஏரி மற்றும் இதைச் சூழ்ந்திருக்கும் பசுமையான மலைகள் போன்றவற்றுக்காகவே இது பிரசித்தி பெற்றுள்ளது. கவலைகளை மறந்து இயற்கையோடு இயற்கையாக ஒன்றி மனதை லேசாக்கிக்கொள்ள இது மிகவும் ஏற்ற இடமாகும். இந்த இடத்தில் நின்று இயற்கையின் எழிலை தரிசித்த தருணமானது என்றுமே மறக்க முடியாத ஒன்றாக மனதில் பதிவது நிச்சயம்.



Click it and Unblock the Notifications