ஜனார்த்தன ஸ்வாமி கோயில் இந்தியாவிலுள்ள முக்கியமான வைணவ கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2000 வருடங்கள் பழமையான இது தெற்குப்பிரதேசத்தின் பெனாரஸ் (காசி) என்று அழைக்கப்படுகிறது.
பாபநாசம் கடற்கரைக்கு அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஒரு டச்சு கப்பல் மாலுமியால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆலயமணி ஒன்று இங்கு விசேஷமான அம்சமாக பயணிகளால் ரசிக்கப்படுகிறது.
விஷ்ணுக்கடவுளை மூலவராக கொண்டுள்ள இக்கோயிலில் வருடா வருடம் ஆராட்டு எனும் திருவிழாச்சடங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. ஹிந்து பஞ்சாங்கத்திய மீன மாதத்தில் 10 நாட்களுக்கு தொடர்ந்து இந்த திருவிழாச்சடங்கு அனுஷ்டிக்கப்படுகிறது.
இக்கோயில் கருவறைக்குள் ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் கருவறையை சுற்றியுள்ள பிரகாரம் உள்ளிட்ட இதர பகுதிகளுக்கு விஜயம் செய்ய தடையில்லை.
ஹிந்துக்கள் தங்கள் முன்னோர்களை வணங்குவதற்காக இக்கோயிலில் தரிசனம் மேற்கொள்ளும் ஐதீகம் நிலவுகிறது. இங்குள்ள தீர்த்தக்குளத்துக்கு பாவங்களை கழுவும் சக்தி உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
தென்னிந்திய மரபுப்படி கட்டப்பட்டுள்ள இந்த கோயில் வர்கலா ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications