வர்கலா பீச் திருவனந்தபுரத்திலிருந்து 54கி.மீ வடக்கே அமைந்துள்ளது. இந்த கடற்கரைப்பகுதியில் 1ம் நூற்றாண்டிலிருந்தே நடத்தப்பட்டு வரும் வாவு பேலி எனப்படும் ஹிந்து சடங்கிற்காக இந்த இடம் புகழுடன் அறியப்படுகிறது.
ஜனார்தன ஸ்வாமி கோயில் எனும் 2000 வருட பழமையை கொண்ட...
ஜனார்த்தன ஸ்வாமி கோயில் இந்தியாவிலுள்ள முக்கியமான வைணவ கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2000 வருடங்கள் பழமையான இது தெற்குப்பிரதேசத்தின் பெனாரஸ் (காசி) என்று அழைக்கப்படுகிறது.
பாபநாசம் கடற்கரைக்கு அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஒரு டச்சு கப்பல்...
வர்கலா நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் வடக்கே கொல்லம் செல்லும் பாதையில் இந்த கப்பில் ஏரி அமைந்துள்ளது. வர்கலா பகுதியில் இது மற்றுமொரு விசேஷமான சுற்றுலா அம்சமாகும். அரபிக்கடலும் உப்பங்கழி நீர்த்தேக்கமும் சங்கமிக்கும் இந்த ஏரிப்பகுதியானது தென்னை மரங்களின் எழில்...
பொன்னும்துருத்து தீவு வர்கலாவிலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. முக்கியமான சுற்றுலா ஸ்தலமான இந்த தீவு ஸ்தலத்தை படகுகள் மூலம் சென்றடையலாம். இந்த தீவு கோல்டன் ஐலேண்ட் அல்லது தங்கத்தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தீவில் ‘துருத்து...
கேரளாவிலுள்ள முக்கியமான ஆன்மீக மடங்களில் இந்த சிவகிரி மடம் ஒன்றாகும். புகழ் பெற்ற சமய-தத்துவ ஞானியான ஸ்ரீ நாரயாணகுரு அவர்களின் சமாதி இந்த திருமடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள் எனும் உன்னதமான தத்துவத்தை போதித்து அதனை பரப்புவதில் தன்...
924 அடி நீளமுடைய இந்த வர்கலா நீர்வழி சுரங்கப்பாதை திருவாங்கூர் திவான் டி.மஹாதேவராவ் என்பவரால் 1867ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிப்பதற்கு 14 ஆண்டுகள் ஆயின.
முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த சுரங்கப்பாதை அட்டிங்கல் அரண்மனைக்காக...
அஞ்செங்கோ ஃபோர்ட் எனும் இந்த புராதன கோட்டையானது 1695ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டுள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் உப்பங்கழி தேக்கத்துக்கும் இடையில் அமைந்துள்ள அஞ்செங்கோ எனும் இடத்தில் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வர்கலா...
வர்கலாவுக்கு அருகிலுள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த வர்கலா லைட் ஹவுஸ் எனப்படும் கலங்கரை விளக்கமாகும். 17ம் நூற்றாண்டைச்சேர்ந்த இது ஆங்கிலேயர் கால கட்டிடக்கலை சின்னமாக காட்சியளிக்கிறது.
130 அடி உயரத்தை கொண்டுள்ள இந்த கலங்கரை விளக்கம் கிழக்கிந்திய...
சர்க்கர தேவி கோயில் கேரளாவிலுள்ள முக்கிய புண்ணிய யாத்திரை ஸ்தலங்களின் ஒன்றாகும். இந்த கோயிலின் உட்பகுதி செவ்வக வடிவிலும், கூரை வெண்கலத்தால் வேயப்பட்டதாகவும் காணப்படுகிறது.
கோயிலின் இரண்டாவது அடுக்கில் கிருஷ்ணர், ராமர், துர்க்கா, கணபதி, விஷ்ணு,...
கடுவாயில் தங்கல் எனும் முஸ்லிம் ஞானிக்காக இந்த கடுவாயில் ஜும்மா மசூதி உருவாக்கப்பட்டுள்ளது. சுன்னி பிரிவைச்சேர்ந்த இந்த மசூதியானது உள்ளூர் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி எல்லா பிரிவை சேர்ந்தவர்களுக்கும் புனிதத்தலமாக இது விளங்குகிறது.
கடுவாயில் தங்கல்...
திருவனந்தபுரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த பாபஸ்நானம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையிலுள்ள நீரூற்றில் மூழ்கி எழுபவர்களில் பாவங்கள் கழுவி துடைக்கபடுகின்றன எனும் நம்பிக்கையின் காரணமாகவே இந்த ஸ்தலம் ‘பாப – ஸ்நானம்’ என்ற பெயரில்...