கடுவாயில் தங்கல் எனும் முஸ்லிம் ஞானிக்காக இந்த கடுவாயில் ஜும்மா மசூதி உருவாக்கப்பட்டுள்ளது. சுன்னி பிரிவைச்சேர்ந்த இந்த மசூதியானது உள்ளூர் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி எல்லா பிரிவை சேர்ந்தவர்களுக்கும் புனிதத்தலமாக இது விளங்குகிறது.
கடுவாயில் தங்கல் ஜும்மா மஸ்ஜித் மற்றும் கடுவாயில் தங்கல் ஜும்மா தர்க்கா என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. இந்த தர்க்கா அதிக எண்ணிக்கையில் பக்தர்களை ஈர்க்கிறது.
இங்கு குடிகொண்டிருக்கும் சூஃபி ஞானி குறைகளை எல்லாம் தீர்ப்பார் என்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தெய்வீக சக்திகளை அவர் பெற்றிருந்ததாக கதைகள் சொல்லப்படுகின்றன.
இந்த தர்க்காவில் பரவியிருக்கும் ஆன்மீக சூழலும் இறை அமைதியும் பார்வையாளர்கள் யாவரையுமே ஒருவித சாந்தி நிலைக்கு உட்படுத்துகின்றன.
தேசிய நெடுஞ்சாலை 47ன் மீது அமைந்துள்ள இந்த தர்க்காவுக்கு அருகிலேயே கல்லம்பலம் மற்றும் அட்டிங்கல் போன்ற முக்கியமான இடங்களும் அமைந்துள்ளன. பல மதங்களை சேர்ந்தோரும் கலந்து வழிபடும் இந்த ஆன்மீக ஸ்தலமானது மத நல்லிணக்கத்துக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வீற்றிருக்கிறது.