கேரளாவிலுள்ள முக்கியமான ஆன்மீக மடங்களில் இந்த சிவகிரி மடம் ஒன்றாகும். புகழ் பெற்ற சமய-தத்துவ ஞானியான ஸ்ரீ நாரயாணகுரு அவர்களின் சமாதி இந்த திருமடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள் எனும் உன்னதமான தத்துவத்தை போதித்து அதனை பரப்புவதில் தன் வாழ்நாளை செலவிட்டவரே மஹாஞானி ஸ்ரீ நாராயணகுரு ஆவார்.
இது ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று உண்மையாகும். ஆயிரக்கணக்கில் பக்தர்களை ஈர்க்கும் இந்த திருமடத்தில் டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சிவகிரி யாத்திரை எனும் திருவிழா அனுஷ்டிக்கப்படுகிறது. அச்சமயம் வெவ்வேறு சடங்குகளும் சமூகக்கலை நிகழ்ச்சிகளும் இம்மடத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
குரு ஜயந்தி மற்றும் சமாதி நினைவுநாள் போன்றவையும் முறையே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷ நாட்களில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், சமபந்தி விருந்துகள், மாநாடுகள் மற்றும் விசேஷ சடங்குகள் போன்றவை சிவகிரி மடத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன.
காலை 5.30 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் 6.30 வரையும் இந்த சிவகிரி மடம் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.