1917ம் ஆண்டில் ஜய்பூர் மஹாராஜாவால் விருந்தாவன் நகரத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்று இந்த ஜய்பூர் கோயில் ஆகும். ஆயிரக்கணக்கான கலைஞர்களைக்கொண்டு 30 ஆண்டுகளில் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்றவற்றை ஜய்பூர் மஹாராஜா தனது நேரடி மேற்பார்வையில் நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது.
நகரின் மையத்திலேயே அமைந்திருக்கும் இந்த கம்பீரமான கோயில் கருங்கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான பாறைத்தூண்கள் சலவைக்கல் அமைப்புகள் மூலம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
அக்காலத்திய இந்திய கட்டிடக்கலை மேன்மைக்கு இவை ஒரு சான்றாக வீற்றிருக்கின்றன. கோயிலின் பூஜைப்பீட பகுதியில் ராதா-மாதவா, ஆனந்தா - பிஹாரி மற்றும் ஹன்சா – கோபாலா ஆகியோர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.