கிமா சொங்கா என்பது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் தூண் போன்ற அமைப்பாகும். ஈமச்சடங்குகள் முடிந்தவுடன் இந்த தூண் வீட்டு வாசலின் முன் பகுதியில் வைக்கப்படுகிறது.
மரத்தால் ஆன இந்த தூண் வடிவங்கள் மனித உருவத்திலேயே செதுக்கப்பட்டு இறந்தவர்கள் உடைகள் மற்றும் பயன்படுத்திய பொருட்களும் இதில் தொங்கவிடப்படுகின்றன.
கரோ இனத்தார் எந்த அளவுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் மற்றும் மரியாதை அளிக்கின்றனர் என்பதை இதன் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம். இறந்து போனவர்கள் என்றும் அவர்கள் மனதில் வாழ்கின்றனர் என்பதை உணர்த்துவதுபோன்று இந்த நினைவுத்தூண்கள் அமைந்துள்ளன.
மேகாலயா மாநிலத்தின் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இந்த வகையான நினைவுத்தூண்களை பார்க்கலாம். ஷில்லாங் நகரத்திலிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் இந்த கரோ ஹில்ஸ் பகுதிக்கு வரலாம்.



Click it and Unblock the Notifications