ரங்கபணி எனும் இந்த கிராமம் மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ மலை மாவட்டத்தில் உள்ளது. இங்கு ஔரங்கசீப் மன்னரின் படைத்தளபதியான மீர் ஜும்லா என்பவரின் கல்லறை இங்கு அமைந்துள்ளது.
வடகிழக்கு பகுதிக்கு சென்று திரும்பும் வழியில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இந்த கிராமத்தில் அவர் உயிர் துறந்துள்ளார். உள்ளூர் இஸ்லாமிய சங்கம் இந்த சமாதியை பராமரித்து வருகிறது.
வரலாற்று முக்கியத்துவம் மட்டுமல்லாமல் இயற்கை அழகுக்காகவும் இந்த கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது. இதன் அமைதியான சூழல் மற்றும் சுத்தமான காற்று போன்றவை பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன.
இந்த கிராமத்திலுள்ள பசுமையான மலைச்சரிவுகளை தொலைதூரத்திலிருந்தே பார்க்க முடியும். அஸ்ஸாம் மாநில எல்லையை ஒட்டிய மன்சச்சார் எனும் இடத்திற்கு அருகில் உள்ள இந்த கிராமத்திற்கு துரா நகரத்திலிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் வரலாம்.