நீங்கள் வோக்காவுக்கு வருகை தரும்போது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,250 அடி உயரத்தில், கீழே உள்ள பள்ளத்தாக்கின் அழகைக் காட்சிப்படுத்தும் டோட்ஸு சிகரத்துக்கும் கட்டாயம் வருகை தாருங்கள்.
உள்ளூரில் உலவும் நாட்டுப்புறக் கதைகளின் படி, இம்மலை ஒரு ராட்சஸ பாம்பு மற்றும் நண்டு ஆகியவற்றினால் பாதுகாக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இவ்விடம் வோக்கா நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ளது.
பாறை ஏற்றத்துக்கு உகந்த இடமான இது, பாறை ஏறும் சாகசத்தில் ஈடுபட விழையும் சுற்றுலாப் பயணிகளை உலகெங்கிலுமிருந்து ஈர்க்கக் கூடியதாக விளங்குகிறது.
சுற்றுலாத் துறையினரால் அமைக்கப்பட்ட அடிவார முகாம் ஒன்று இச்சிகரத்தின் அடிவாரத்தில் உள்ளது. அடிவாரத்தில் காணப்படும் சிறு ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகள் இந்த இடத்தின் அழகுக்கு அழகூட்டுவனவாக உள்ளன.
இவற்றுள் ஒரு ஏரி, நாகா புராணங்களில், இந்த ஏரியின் பெண் தேவதையைத் திருமணம் செய்துள்ளதாகக் கூறப்படும் சந்த்பங் என்னும் மனிதனின் வீடாகக் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications