கலாச்சாரமும் வரலாற்றுச் சிறப்பும் மிகுந்த இடம் யானம். யானத்தின் வரலாறு 300 ஆண்டுகள் பழமையானது. பிரெஞ்சு காலனியாக இருந்த யானம் இப்போது வரை பெருவாரியான மக்களால் பிரெஞ்சு யானம் என்றே அழைக்கப்படுகின்றது. காலனி ஆட்சியின் போது, 1954 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது புதுச்சேரி.
தற்போது இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக திகழ்கின்றது. ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு அருகில், 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இவ்வூர் அமைந்து இருக்கிறது. குழ்ந்தை திருமணம் சட்டவிரோதமாக இல்லாத காலத்தில் இவ்வூர் தெலுங்கு மக்களால் கல்யாணபுரம் என்று அழைக்கப்பட்டது.
யானம் 68% முதல் 80% வரை ஈரப்பதம் மிகுந்த வெப்பமான வானிலையை கொண்டு இருக்கிறது. அதிக உஷ்ணத்தின் காரணமாக கோடையில் யானத்திற்கு செல்வது பரிந்துரைக்கப்படுவது இல்லை.
இருப்பினும், அதிகமான தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளினால் இந்நகரம் பயன் அடைகிறது. ஆண்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்நகரம் வானம் தெளிவாக காணப்படுகின்றது, மழைக்காலத்தில் மாத்திரம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது.
ஆந்திராவின் ராஜமுந்திரி மற்றும் தமிழகத்தின் சென்னை நகரங்களில் இருந்து யானத்தை எளிதில் அடையலாம். இவ்விரு நகரங்களில் இருந்து சாலை வழியாக யானத்தை அடைவது சிக்கனமானதாக இருக்கும். சாலை வழியாக 147 கி.மீ. தொலைவில் சென்னை இருக்கிறது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரான காக்கிநாடாவில் இருக்கும் ரயில் நிலையமே யானத்திற்கு நெருக்கமான ரயில் நிலையம் ஆகும். யானத்தில் இருந்து 26 கி.மீ. தொலைவில் காக்கிநாடா இருக்கிறது. சாலை வழியாக காக்கிநாடாவில் இருந்து யானத்திற்கு பயணம் செய்ய ஒரு மணி நேரம் ஆகும்.