இந்த அரசுப் பண்ணை புங்கனூர் ஏரி அருகே அமைந்துள்ளது. வனத் துறையால் பராமரிக்கப்படும் இங்கு சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன் படுத்தப் படும் பல அரிய மூலிகைகளும் தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன.
அவற்றின் மருத்துவ குணத்தின் பேரால் இந்த மூலிகைகள் மருத்துவப் பயன்பாட்டிற்காக வியாபார ரீதியில் வளர்க்கப் படுகின்றன. அரசுப் பழத் தோட்டங்கள் அதனாவூர் மற்றும் நிலாவூரில் அமைந்துள்ளன.
உண்மையில் இவை தாவரவியல் தோட்டங்கள் ஆகும். இங்கு பல வகையான பழங்களையும் பூக்களையும் தாங்கி நிற்கும் மரங்களும் செடிகளும் உள்ளன இந்தத் தோட்டங்களில் நடந்து செல்லும்போது இதன் அழகிய தோற்றம் , நறுமணம் மற்றும் சுவையைத் தூண்டும் பழங்கள் உங்கள் உணர்வுகளை உருகச் செய்கின்றன.



Click it and Unblock the Notifications