அகர்தலா சிட்டி சென்டர் எனும் இந்த நகர்ப்பகுதி அகர்தலா நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. ஒரு திட்டமிட்ட நகரம் என்பதால் இந்த சிட்டி செண்டர் பகுதி சுத்தமான சாலைகள் மற்றும் இருபுறமும் கடைகள் எனும் அமைப்புடன் காட்சியளிக்கிறது.
வடகிழக்குப்பகுதியின் இரண்டாவது பெரிய நகரம் என்பதால் இங்கு பல சர்வதேச பிராண்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கடைகள் நிரம்பியுள்ளன.
எனவே சிட்டி சென்டர் எப்போதும் உயிர்ப்புடன் சந்தடி நிரம்பிய மார்க்கெட் பகுதியாக காணப்படுகிறது. இங்கு முக்கியமான அம்சங்களாக மெயின் ஷாப்பிங் மால் மற்றும் அகர்தலா முனிசிபல் கவுன்சில் வளாகம் போன்றவை அமைந்துள்ளன.
சமீபத்தில் இந்த அகர்தலா சிட்டி சென்டர் மற்ற நகரங்களில் காண முடியாத அளவுக்கு மின் விளக்குகளால் வெளிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. 50 கிலோவாட் சக்தி கொண்ட சோலார் மின்நிலையம் மூலம் இந்த மின் விளக்குகள் இயக்கப்படுகின்றன என்பது ஒரு தனித்தன்மையான அம்சமாகும்.
தற்போது கட்டமைப்பு நிலையில் உள்ள இந்த சோலார் மின்நிலையம் பூர்த்தியடைந்தவுடன் நாட்டிலேயே முதல் சூரிய மின்னுற்பத்தி நகரம் எனும் பெருமை அகர்தலாவிற்கு கிடைக்கும்.