பங்களாதேஷை ஒட்டிய எல்லை மாநிலமான திரிபுராவின் தலைநகரான அகர்தலா மிகச்சரியாக எல்லை விளிம்பில் அமைந்திருக்கிறது. இந்த அக்கௌரா பார்டர் எனும் நுழைவாயில் பகுதி இந்தியாவையும் பங்களாதேஷையும் இணைக்கும் வாசல் அமைப்பாகும்.
இரு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் நிலவழிப்போக்குவரத்து இந்த வாசல் வழியாகவே பெரும்பாலும் நடைபெறுகிறது.
இந்தியா சுதந்திரமடைந்து இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாக பிரிவதற்கு முன்பு அகர்தலாவிலிருந்து கிழக்கு வங்காளத்திற்கு ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் இந்த ரயில் பாதை வடகிழக்கிந்தியா மற்றும் திரிபுராவை ஒட்டிய பகுதிகளுக்கான உயிர்ப்பாதையாக விளங்கியது.
அதாவது சுதந்திரத்திற்கு முன் அகர்தலாவை கல்கத்தா மற்றும் கிழக்கு வங்காளம் வழியாக சுலபமாக சென்றடைந்துவிடலாம். ஆனால் இப்போது மிக நீண்ட தேசிய சுற்றுப்பாதை வழியாக அஸ்ஸாம் கடந்து அகர்தலாவிற்கு செல்ல வேண்டியுள்ளது.
இன்று இந்த அக்கௌரா பார்டர் இந்தியப்பகுதியிலிருந்து பங்களாதேஷ் செல்வதற்கான நுழைவாயிலாகவும் இரு நாட்டு பரிவர்த்தனைகளை சுலபமாக்கும் பாதையாகவும் விளங்குகிறது. இந்த எல்லைவாசற்பகுதியில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications