நோபல் விருது பெற்ற பிரபல இந்திய கவிஞரான ரவிந்திரநாத் தாகூர் 1919ம் ஆண்டில் அகர்தலா வந்தபோது இந்த இல்லத்தில்தான் தங்கியுள்ளார். அப்போதைய திரிபுரா மன்னர் தாகூருடன் நெருங்கிய நட்புறவை கொண்டிந்தார்.
அவரின் அழைப்பின் பேரில் தாகூர் அடிக்கடி அகர்தலாவிற்கு விஜயம் செய்துள்ளார். 1919ம் ஆண்டில் அவர் அகர்தலா வந்தபோது இந்த மலாஞ்சியா நிவாஸ் இருந்த இடத்தில் ஒரு பழைய மண்வீடு இருந்தது.
மன்னருக்கு சொந்தமான இந்த வீட்டில்தான் தாகூர் தங்கியிருந்தார். மஹாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யாவின் தனி வசிப்பிடமாக இந்த வீடு இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் அந்த மண்வீடு காபிகுரு விருந்தினர் இல்லமாக பயன்பட்டு வந்தது. இன்று அந்த மண்வீடு இடிக்கப்பட்டு இரண்டு அடுக்கு கொண்ட கான்க்ரீட் கட்டிடம் கட்டப்பட்டு மலாஞ்சியா நிவாஸ் என்ற பெயரில் ஒரு ஞாபகார்த்த இல்லமாக அழைக்கப்படுகிறது.
குஞ்சாபன் அரண்மனையை நோக்கியவாறு ஒரு மலையின்மீது இந்த மலாஞ்சியா நிவாஸ் அமைந்திருக்கிறது.