அகர்தலா நகரத்திலிருந்து 100 கி.மீ தூரத்தில் இந்த பிலாக் எனும் சிறிய நகரம் அமைந்துள்ளது. இது இங்குள்ள தொல்லியல் மிச்சங்களுக்காக பிரபல்யம் அடைந்துள்ளது.
7ம் நூற்றாண்டு மற்றும் 8ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்லியல் சான்றுகள் இங்கு காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இது ஹிந்துக்கள் மற்றும் புத்த மதத்தினருக்கான ஒரு புனித யாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகிறது. திரிபுராவின் தென்பகுதியில் பெலோனிய சப்டிவிஷனில் இந்த இடம் அமைந்திருக்கிறது.
இங்கு காணப்படும் தொல்லியல் சான்றுகள் பல நூறு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் நிலவிய கலாச்சாரம் குறித்த தகவல்களை அளிக்கின்றன. ஹிந்து மற்றும் பௌத்த சுடுமண் சிற்பங்கள் போன்றவை இந்த சான்றுகளில் குறிப்பிடத்தக்கவை.
நரசிம்மர் மற்றும் அவலோகிதீஸ்வரர் ஆகிய தெய்வச்சிலைகள் மற்றும் பௌத்த ஸ்தூப அமைப்புகள், சுடுமண் குறிப்பேடுகள் போன்றவை இங்கு காணக்கிடைக்கின்றன.
இந்த வரலாற்று ஸ்தலத்தில் காணக்கிடைக்கும் சான்றுகள் யாவும் அக்காலத்தில் பௌத்தம் மற்றும் ஹிந்து மரபு ஒருசேர பின்பற்றப்பட்டு வந்திருப்பதை குறிப்பிடுகின்றன.
அகர்தலாவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பிலாக் ஸ்தலத்துக்கு பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலமாக வரலாம். இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் குமார்காட் எனும் இடத்திலும் விமான நிலையம் அகர்தலாவிலும் உள்ளது.