ரோஸ் வேலி அமியூஸ்மெண்ட் பார்க் வடகிழக்கிந்தியாவில் உள்ள சிறந்த பொழுதுபோக்கு பூங்காவாகும். இது ரோஸ் வேலி எனும் நிறுவனத்தால் துவங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அகர்தலா பகுதியில் அம்தலி எனும் இடத்தில் இந்த உல்லாசப்பூங்கா அமைந்துள்ளது.
வடகிழக்கிந்தியாவில் இது போன்று வேறில்லை எனும்படியாக பிரசித்தி பெற்றுள்ள இந்த ரோஸ் வேலி உல்லாசப்பொழுது பூங்காவில் ஒரு நாள் பொழுதை கேளிக்கை மற்றும் உல்லாச விளையாட்டுகளில் ஈடுபட்டு கழிக்கலாம்.
பரந்த இடத்தில் இயற்கைச்சூழல் மற்றும் செயற்கை விளையாட்டு அமைப்புகள் போன்றவற்றின் கலவையாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள நீர்விளையாட்டுப்பிரிவு மிக விசேஷமானதாக பிரசித்தி பெற்றுள்ளது.
ரோஸ் வேலி அமியூஸ்மெண்ட் பார்க் அகர்தலா நகரத்திற்குள்ளேயே அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை. பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் மூலமாக இந்த பூங்காவுக்கு வரலாம். அம்தலி நோக்கி செல்லும் சாலையில் இது அமைந்திருக்கிறது.