ஏஹோல் பகுதியில் மற்றொரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமான இந்த கோயில் பகவதி தெய்வத்துக்காக 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கல்யாண சாளுக்கிய கட்டிடக்கலை பாணியை கொண்டுள்ள இந்த கோயிலின் வெளிச்சுவற்றில் 16 தூண்கள் காணப்படுகின்றன.
உயரமான வார்ப்பு அடித்தளத்தின்மீது இவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூண்களின் இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ள பாறைப்பலகைகள் ஒரு பாதுகாப்புச் சுவரைப்போல் காணப்படுகின்றன. ஜெயின் கோயில்களின் வடக்கு திசையில் அமைந்துள்ள இந்த கோயில் லாட் கான் கோயிலைப்போன்றே கட்டப்பட்டுள்ளது.