ஏஹோல் மலையின் மீது ஒரு மேடை அமைப்பின் மீது அமைந்துள்ள இந்த ஜெயின் மெகுதி கோயில் கலகநாத கோயில் தொகுப்பில் ஒன்றாகும். கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளின் படி இது 634ம் ஆண்டு இரண்டாம் புலிகேசியின் தளபதி ரவிகீர்த்தியினால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாகக் காணப்படுகிறது. இருப்பினும் அக்காலத்திய மற்ற கோயில்களை விடவும் நுணுக்கமான சிற்ப வேலைகளை இந்த ஜெயின் மெகுதி கோயில் கொண்டுள்ளது.
இதனுள்ளே மஹாவீர் பஹவானின் பிரம்மாண்ட சிலை அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. சிதைக்கப்பட்டிருந்த போதிலும் அழகுடன் காணப்படும் ஒரு அம்பிகா சிலையும் இங்குள்ளது.
சுண்ணாம்புக்கலவை ஏதும் உபயோகிக்கப்படாமல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் தற்சமயம் பாழடைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் திராவிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கும் இதன் கலையம்சத்துக்காக பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
ஏஹோலில் உள்ள 100க்கும் மேற்பட்ட கோயில்களை இங்கு மேலிருந்து பார்த்து ரசிக்கலாம என்பதால் பயணிகள் அவசியம் வருகை தரவேண்டிய கோயில் இது. ஆதியில் பெரிய தூணுடன் கூடிய முகமண்டபத்துடன் இருந்த இக்கோயிலில் 16 உத்தரங்களுடன் கூடிய முன்விதான அமைப்பு பின்னர் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த விதான அமைப்பு கருவறைக்கும் மேல் பிரம்மாண்டமாக காணப்படுகிறது. ஒரு வெளி முற்றமும் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தில் ஏறுவதற்கு படிக்கட்டுகளும் காணப்படுகின்றன. இதன் கூரையின் ஏறிப்பார்த்தால் கருவறைக்கு நேர் மேலாக மற்றொரு சிறிய கோயிலும் அமைந்திருப்பதை பார்க்கலாம்.