அடுத்ததாக பயணிகள் பார்க்க வேண்டிய கோயில்கள் பிரசித்தமான இந்த ஜோதிர்லிங்க கோயில்களாகும். இந்த தொகுப்பில் உள்ள கோயில்கள் 8ம் மற்றும் 10 நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன.
இதில் இரண்டு கோயில்கள் அளவில் சிறிதாக சமதளக்கூரையோடு நந்தி மண்டபத்துக்கு எதிரிலும் மற்றவை சுகநாசம், கருவறை மற்றும் வெளிப்பிரகாரம் போன்றவற்றையும் கொண்டுள்ளன.
இரண்டு கோயில்களில் கடம்பநகர கோபுரமும், மற்றும் இரண்டில் கல்யாண சாளுக்கிய கால கல்வெட்டுக்குறிப்புகளும் காணப்படுகின்றன. இருப்பினும் இத்தொகுப்பின் எல்லா கோயில்களும் மோசமான நிலையில் உள்ளன.