மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் சாச்சா நேரு அருங்காட்சியகம் த்ரீ டாட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ளது. 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், அதன் பரவலான வகையிலான உயிரியல், புவியியல் மற்றும் வரலாற்றுப் பொருட்களுக்காக மிகவும் புகழ் பெற்றுள்ள இடமாகும்.
பாறைகள், தனிமங்கள், இரத்தினங்கள், அஞ்சல்தலைகள், நாணயங்கள் என குழந்தைகள் பார்க்கவும், கற்றுக்கொள்ளவும் ஏற்ற முக்கியமான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கிருக்கும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓவியங்கள் மற்றும் நவீன அறிவியல் சாதனங்களை கொண்டுள்ளதால் இந்நாட்டிலேயே மிகச்சிறந்த அறிவியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது.
அதிகளவில் உள்ளூர் மாணவர்கள் வந்து சென்றாலும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் மியூசியமாக இது உள்ளது. குழந்தைகள் தொடர்பு கொள்ளும் வகையிலும் மற்றும் தகவல்பூர்வமாகவும் அறிவியல், புவியியல் மற்றும் விண்வெளி தொடர்பான பாடங்களை உணர்ந்து படிக்கும் வகையில் இருப்பதற்காகவே இந்த மியூசியம் உருவாக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications